மீண்டும் அமேதியில்  போட்டியிடுவாரா ராகுல்?

மீண்டும் அமேதியில்  போட்டியிடுவாரா ராகுல்?
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

டந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கே அமேதி, தெற்கே வயநாடு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் மண்ணைக் கவ்வினார். அவரைத் தோற்கடித்தவர் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி.

மீண்டும் ஸ்மிருதி இரானி அமேதியில்தான் போட்டி இடுவார் என்பதால், அவர் தன் தொகுதியை நன்றாக கவனித்து வருகிறார்.

ஆனால், “மறுபடியும் அமேதியில் போட்டியிடுவாரா ராகுல்” என்ற கேள்வி எழுந்துள்ளது. “நேரு குடும்பத்து பாரம்பரிய தொகுதி அமேதி” என்று சொல்லி, “அங்கே மீண்டும் ராகுல் போட்டியிட்டே ஆகவேண்டும்” என்று சில காங்கிரஸ் தலைவர்கள் ராகுலிடம் சொல்லி வருகிறார்கள். அவரும் அதன்படி அங்கே போட்டியிடத் தயாராகி வருகிறார்.

அண்மையில்” அமேதி தொகுதி மக்களின் மனநிலையை அறிந்து வரவேண்டும்” என்று ராகுல் கருத்து தெரிவிக்க, அதன் முதல் கட்டமாக அமேதி தொகுதியில் காங்கிரஸ் செயல்வீரர்களின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடானது.

உ.பி. காங்கிரஸ் கமிட்டி தலைவரான பிரிஜ்லால் கப்ரி அண்மையில் அமேதிக்குப் போனார். பாதி கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  தான் ராஜினாமா செய்வதாய் அறிவித்தார்.

உ.பி. காங்க். கமிட்டி தலைவரும், சரி, உள்ளூர் தலைவர்களும் சரி என் பேச்சைக் கேட்பதில்லை; அப்புறம் நான் எதற்கு மாவட்ட தலைவராக இருக்க வேண்டும்? என்பது அவரது கேள்வி.

“அமேதியில் நடந்த இந்த சலசலப்பு, மாநிலமெங்கும் இருக்கும்  நிலைமையின் ஒரு ஐஸ் கட்டியின் முனைதான்” மாநில அரசியலில் அகிலேஷ் ஒருவர்தான் ஆக்டிவாக இருக்கிறார். மாயவதியும், காங்கிரசும் டம்மி பீஸ் ஆகிவிட்டார்கள்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள் உள்ளூர் அரசியல் வட்டத்தினர்.

logo
Kalki Online
kalkionline.com