

ஜனவரி மாத இறுதியில், இந்தோனேசியாவில் ஒரு பெரிய பெண் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பை முறையாக அளவிட்டப் பிறகு, ஒரு சாதனை படைத்த கண்டுபிடிப்பை வனவிலங்கு நிபுணர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
மரோஸ் பகுதியில் காணப்படும் இந்தப் பாம்பு, இது வரை ஆவணப்படுத்தப்பட்டதில் மிக நீளமான காட்டுப் பாம்பாக கருதப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனைகள் மலைப்பாம்பின் தலை முதல் வால் வரை 7.22 மீட்டர் நீளம் இருப்பதை உறுதிப்படுத்தியது. ஜனவரி 18 அன்று சர்வேயர் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு சரிபார்க்கப்பட்டது. பின்னர் இந்த ஊர்வனத்திற்கு இபு பரோன் என்று பெயரிடப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பதட்டங்களை எடுத்துக் காட்டுகிறது என்றும் பாதுகாவலர்கள் கூறுகிறார்கள்
நிபுணர்கள், இந்த பாம்பானது கிட்டத்தட்ட ஆறு ஷாப்பிங் டிராலிகளுக்குச் சமம் என்றும் கூறுகிறார்கள். மயக்க மருந்தின் கீழ், பாம்பை இன்னும் நீளமாக அளக்கலாம் என்றும் மேலும் அதன் தளர்வான நீளம் 7.9 மீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். இருப்பினும், கடுமையான ஆபத்துகளின் காரணமாக மயக்க மருந்தை அப்பாம்பிற்கு அவர்கள் கொடுக்கவில்லை.
கின்னஸ் உலக சாதனைகள் வனவிலங்குகளுக்கு தேவையற்ற மயக்கத்தை அளிக்க அனுமதிப்பதில்லை. கவனமாக பதிவு செய்யப்பட்டபோது மலைப்பாம்பு 96.5 கிலோகிராம் எடையுள்ளதாக இருந்தது. பாம்பு சமீபத்தில் சாப்பிடவில்லை என்பதை கையாளுபவர்கள் உறுதிப்படுத்தினார்கள். உணவளித்த பிறகு, அதன் எடை 100 கிலோகிராம்களை தாண்டக்கூடும் என்று நிபுணர்கள் கருதினார்கள்.
இந்தோனேசியா மற்றும் பாலியைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த வனவிலங்கு நிபுணர்கள் இந்த மதிப்பீட்டில் ஈடுபட்டனர். உரிமம் பெற்ற பாம்பு கையாளுநரான டயஸ் நுக்ரஹா அளவீடுகளுக்கு தலைமை தாங்கினார். ஆய்வாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ராடு ஃப்ரென்ஷியு ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கு உதவினார். பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் பெக்கலோனி மூலம் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. உள்ளூர் வதந்திகளைக் கேட்ட பிறகு குழு விரைவாகப் பயணித்தது. அவர்களின் நோக்கம் துல்லியமான அளவீடு மற்றும் பாதுகாப்பு. விளம்பரம் இதே போன்ற விலங்குகளைக் காப்பாற்றும் என்று பாதுகாவலர்கள் நம்பினர்.
இந்த மலைப்பாம்பு தற்போது பாதுகாவலர் புடி பூர்வாண்டோவின் பாதுகாப்பில் வாழ்கிறது. அவர் மரோஸ் கவுண்டியில் ஒரு தனியார் சரணாலயத்தை நடத்தி வருகிறார். உள்ளூர்வாசிகள் இந்த பெண் பாம்பை கண்டுபிடித்ததை அறிந்ததும் பூர்வாண்டோ தலையிட்டு அதை காப்பாற்றினார்.
பெரிய பாம்புகள் பெரும்பாலும் குடியிருப்புகளுக்கு அருகில் உடனடியாக கொல்லப்படுவது வழக்கம். பல ஆபத்தான மலைப்பாம்புகளால் உயிரிழப்பு சம்பவங்கள் பிராந்திய ரீதியாக நிகழ்ந்துள்ளன. வாழ்விட இழப்பு பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சந்திப்புகளை மோசமாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
காடுகள் சுருங்கி வருவதால் இயற்கை இரை குறைகிறது என்று நுக்ரஹா GWR (Guinness world record) இடம் கூறினார். வேட்டையாடுதல் காட்டு பன்றிகள் போன்ற உணவு ஆதாரங்களையும் கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக, மலைப்பாம்புகள் கிராமங்களுக்கு அடிக்கடி நுழைகின்றன.
உலகின் மிக நீளமான பாம்பு இனம் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகளாகும். பெரும்பாலானவை மூன்று முதல் ஆறு மீட்டர் வரை வளரும். பெண்கள் அதிக நீளத்தை எட்டும்.
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மற்றொரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் வெளிநாட்டு செல்லப் பிராணிகளாக தேடப்படுகின்றன. விஷம் இல்லாத போதிலும், அவை சக்திவாய்ந்த சுருக்கத்தின் மூலம் கொல்லப் படுகின்றன. ஆகவே அவைகள் அழிந்து விடும் என்கிற பயம் பெரும்பாலும் பாதுகாப்பு விழிப்புணர்வை விட அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த முறை ராட்சத பாம்புகள் குறைவாகக் காணாமல் போவதற்கு இவை எல்லாம் தான் காரணங்கள் என்றும் கூறுகிறார்கள்.
பாம்பு உயிர்வாழ்வதற்கு காடுகளைப் பாதுகாப்பது இன்றியமையாததாக உள்ளது என்பதே நிபுணர்களின் ஆணித்தரமான கருத்தாக திகழ்கிறது.