செத்துப்போச்சுனு நினைச்சா திரும்ப வந்து கெத்து காட்டுதே... இந்த பேய் பூனையின் பின்னணி என்ன?

European wildcat
European wildcat
Published on

யற்கை எப்போதுமே தன்னகத்தே பல மர்மங்களை ஒளித்து வைத்திருக்கிறது. நாம் முழுமையாக அழிந்து விட்டது என்று நம்பும் எத்தனையோ உயிரினங்கள், மனிதர்களின் கண்களில் படாமல் ஏதோ ஒரு மூலையில் சத்தமின்றி வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு ஆச்சரியம்தான் ஐரோப்பியக் காடுகளில் நிகழ்ந்துள்ளது. 

பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களின் தேடுதலுக்குச் சிக்காமல், அழிந்தே போனதாகக் கருதப்பட்ட ஒரு விலங்கு மீண்டும் தன் இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதுதான் 'ஐரோப்பியக் காட்டுப்பூனை (European wildcat)'. அதன் அமானுஷ்யமான வாழ்க்கை முறையாலும், கண்ணுக்குப் புலப்படாத நகர்வுகளாலும் மக்கள் அதை 'பேய் பூனை' என்று அழைக்கின்றனர். 

நிழலைப் போல நகரும் தன்மை!

இவற்றைப் பார்ப்பதற்கு நம் வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும் சாதாரணப் பூனைகளைப் போலவே தோன்றும். ஆனால் உற்று நோக்கினால் மட்டுமே வித்தியாசம் தெரியும். வீட்டுப் பூனைகளைவிட இவை அளவில் பெரியவை மற்றும் அபாரமான உடல் வலிமை கொண்டவை. இவற்றின் உடலில் உள்ள அடர்த்தியான கோடுகள் மற்றும் தடிமனான வால் ஆகியவை இவற்றைத் தனித்து காட்டுகின்றன.

இவற்றுக்கு ஏன் 'பேய்' என்று பெயர் வந்தது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. அடர்ந்த காடுகளுக்குள் இவை நடமாடும்போது ஒரு சிறு சலசலப்பு கூடக் கேட்காது. நிழலைப்போலச் சத்தமின்றி நகர்வதிலும், மனிதர்களின் வாடை தெரிந்த அடுத்த நொடியே மாயமாக மறைவதிலும் இவை கில்லாடிகள். ஸ்காட்லாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் மலைப்பகுதிகளில் இவை வாழ்ந்தாலும், யாராலும் இவற்றை அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்..! ஒரே நாளில் 2 முறை உயர்வு..!
European wildcat

மீண்டும் கிடைத்த பொக்கிஷம்!

நீண்ட காலமாக யாருடைய கண்ணிலும் படாததால், இந்த இனம் பூமியை விட்டு மறைந்துவிட்டது என்றே அனைவரும் நம்பினர். ஆனால் 2020 ஆம் ஆண்டு தௌபோவ் மலைப்பகுதியில் நடந்த ஒரு சம்பவம் இந்த நம்பிக்கையை மாற்றியது. பனி படர்ந்த அந்தப் பிரதேசம் ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும். அங்குத் தற்செயலாகச் சென்ற விலாடிமிர் செக் ஜூனியர் என்ற புகைப்படக் கலைஞர், இந்த அரிய வகை விலங்கைப் படம்பிடித்தார். 

மனித நடமாட்டம் இல்லாத அந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இவை இத்தனை ஆண்டுகளாகத் தங்களைத் தற்காத்து வாழ்ந்து வந்துள்ளன என்பது அப்போதுதான் உலகுக்குத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகள் மற்றும் கேமரா பதிவுகள் மூலம், இந்த இனம் இன்னும் அழியவில்லை என்பது உறுதியானது.

இதையும் படியுங்கள்:
இளைஞர்களை அச்சுறுத்தும் 'FOMO' மோகத்தை எதிர்கொள்ளும் வழிகள்!
European wildcat

எதிர்கொள்ளும் சவால்கள்!

இயற்கையின் இந்த மீள்தன்மை ஆச்சரியம் அளித்தாலும், இவற்றின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. காடுகள் அழிக்கப்படுவது இவற்றுக்கு ஒரு பிரச்னை என்றால், அதைவிடப் பெரிய பிரச்னை வீட்டுப் பூனைகள். காட்டுப்பூனைகள் வீட்டுப் பூனைகளுடன் இணை சேரும்போது, பிறக்கும் குட்டிகள் கலப்பினமாகி விடுகின்றன. 

இதனால் 'பெலிஸ் சில்வெஸ்ட்ரிஸ் சில்வெஸ்ட்ரிஸ்' என்ற இந்தத் தூய்மையான காட்டு இனம் மெல்ல மெல்லத் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது. மரபணு ரீதியாகத் தூய்மையான காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com