- எஸ். சந்திரமௌலி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றாலே போதும் நம் இயக்குனர்களுக்கு தலைகால் புரியாது. மூன்றாவது படமும் வெற்றி பெற்று ஹாட் டிரிக் என்றால், ஐயோ கேட்கவே வேண்டாம். தமிழ் சினிமா வரலாற்றில் அவரைப் போல வெற்றிப் படங்களைக் கொடுத்த வேறு இயக்குனர் கிடையாது. ஆனாலும், அவரது பந்தா இல்லாத எளிமை சினிமாக்காரர்கள் மட்டுமில்லை, அனைவருமே கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம். அவர்தான் டைரக்டர் எஸ்பி. முத்துராமன்.. ஒரு முறை அவரிடம், “சார்! சினிமாவில் வெற்றி பெற எது மிக முக்கியம்? திறமையா? அதிர்ஷ்டமா?”என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்,“ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால், திறமை மிகவும் அவசியம். திறமையில்லாமல் பெறும் வெற்றி நிரந்தமில்லை. ஆனால், எனக்குத் தெரிந்து சினிமாத்துறையில் பலர் புத்திசாலிகளாக, திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் விரும்பிய வெற்றியை பெறமுடிவதில்லை. அதைப் பார்க்கிறபோது, திறமையோடு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றார். “என்ன ஒரு பிராக்டிகலான பதில்!” என வியந்தேன். பண்பலை ரேடியோக்கள் இல்லாத காலத்தில் விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பு மிகவும் பாபுலராக இருந்த காலகட்டம். கல்கி இதழ் 1984ல் வியாழக்கிழமைதோறும் விவிதபாரதியில் “நேரம் நல்ல நேரம்” என்ற பெயரில் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியை வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் பல பிரலங்களும் பங்கேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாசகர்களின் கேள்விக்கு பதில் சொன்னார் எஸ்பி.எம்.. ‘கவரிமான்’ படத்தை இயக்கியபோது சிவாஜியுடனான ஒரு அனுபவத்தை சொன்னது மறக்க முடியாத பதில். கதைப்படி, சிவாஜியின் மனைவியான பிரமீளா, வேறு ஒருவரோடு படுக்கையில் இருப்பதை திடீரென்று வீடு திரும்பும் சிவாஜி பார்க்க நேரிடுகிறது. காட்சியை சிவாஜிக்கு விளக்கிவிட்டு, டேக்குக்குத் தயாரானோம். ஸ்டார்ட் சொல்ல, கேமரா சுழல ஆரம்பித்தது. அதிர்ச்சி, ஆத்திரத்தில் கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க, சிவாஜியின் முகத்தில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய, உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டார் சிவாஜி. செட்டில் அனைவரும் பிரமித்துப் போய் நின்றுவிட்டோம். நடித்து முடித்துவிட்டு, சிவாஜி, “என்னப்பா! கட் சொல்லலியா?” என்று கேட்ட பிறகுதான் நாங்கள் எல்லோரும் சுய நினைவுக்கு வந்தோம். சிவாஜி ஈஸ் கிரேட்! என்று குறிப்பிட்டார். ரஜினியை வைத்து மிக அதிக எண்ணிக்கையில் படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்பி.எம். ஒருமுறை அதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ரஜினி பட அனுபவங்கள் பற்றி நிறைய சொன்னார். “சார்! நீங்க எடுத்த ரஜினி பட அனுபவங்களை வைத்து ஒரு தொடர் எழுதலாமே?” என்றேன். உடனே ஓ.கே.சொன்னார். அதுதான் கல்கியில் வெளியான ரஜினி ரூட்..ஒரே சமயத்தில் ரஜினி, கமல் இருவரையும் வைத்து படங்கள் இயக்கியவர். அந்த படங்களை திட்டமிட்டபடி எடுத்து முடித்து ஒரே நாளில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களும் பெரும் வெற்றி பெற்றது தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு சாதனை என்றால் மிகை இல்லை. ஒன்று, கமலை வைத்து எடுக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படமான ‘சகலகலா வல்லவன்’. இன்னொன்று, ரஜினியை வைத்து, வித்தியாசமான கதையோடு எடுத்த சீரியஸ் சப்ஜெக்ட் படமான ‘எங்கேயோ கேட்ட குரல்’. சகலகலா வல்லவன் 175 நாள் ஓடியது. எங்கேயோ கேட்ட குரல் 100 நாள் ஓடியது. இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு ஏவி.எம்.குமரன் சொன்னதை “ரஜினி ரூட்டில்” நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் எஸ்பி.எம். ”இரண்டு படங்களையும் இயக்கியவர் ஒரே இயக்குனரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. இயக்குனர் பெயரை நீக்கிவிட்டு, புதியவர் ஒருவருக்குப் போட்டுக் காட்டினால், இரண்டு படங்களையும் இயக்கியவர் ஒருவர்தான் என்று சொன்னால் நம்பவே மாட்டார்!” என்று சொல்லிப் பாராட்டினாராம்.. ரஜினி நடித்த “பாண்டியன்’ படத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆரம்பம் முதலே ஒரு சில தொழில்நுட்பக் கலைஞர்களை தனக்கென்று வைத்து ஒரு யூனிட் அமைத்துக் கொண்டு, படங்களை இயக்கியவர் எஸ்பி.எம். அவர் யூனிட்டை ‘எஸ்பி.எம். யூனிட்’ என்றே சொல்லுவார்கள். எஸ்பி.எம்.க்கு உதவி செய்யும் நோக்கத்துடன் ரஜினி ஒரு படம் நடித்துத் தர ஒப்புக்கொண்டபோது, அதன் மூலமாக தான் மட்டும் பயனடைய விரும்பாமல், அதை எஸ்பி.எம் யூனிட் தயாரிப்பாக ஆக்கி, படத்தில் கிடைத்த லாபத்தை தன் யூனிட்டைச் சேர்ந்த அனைவரோடும் பகிர்ந்துகொண்டவர் அவர். ‘பாண்டியன்’ பட பூஜைக்கு பல முன்னணி ஹீரோக்களும் வந்து கலந்து கொண்டார்கள். இத்தனை ஹீரோக்கள் வேறு எந்த படத்தின் பூஜையிலாவது ஒருசேர வந்து கலந்துகொண்டிருப்பார்களா? என்று அன்று பூஜைக்கு வந்த பலரும் வியந்தார்கள். ரஜினி பேசும்போது, “முத்துராமன் சார் சேர்த்து வைத்திருக்கும் சொத்து இதுதான் !” என்று குறிப்பிட்டார். ஒரு சமயம், சினிமாவில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், வழக்கமான அவரது டெக்னீஷியன்களுக்கு பதிலாக “புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து படம் எடுத்துத் தர முடியுமா?” என்று ஒரு சிலர் அவரிடம் கேட்டபோது, “வழக்கமான யூனிட்டை மாற்றுவதற்கில்லை; அவர்களோடு சேர்ந்து படம் பண்ணலாம் என்றால் டைரக்ட் செய்கிறேன். இல்லைன்னா படமே பண்ணலை!” என்று உணர்ச்சி பொங்க சொல்லி டைரக்ஷன் வாய்ப்பினை ஏற்க மறுத்தவர் எஸ்பி.எம். ஒரு முறை “கடமை, மரியாதை, அன்பு, நாணயம் இவை எல்லாம் முத்துராமனின் குணாதிசயங்கள். இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட மனிதரை சினிமா உலகில் பார்க்க முடியாது” என்று சோவிடம் சொன்னபோது, அவர் சிரித்தபடியே,” சினிமா உலகத்துல மட்டும் இல்லை! இன்னிக்கு சமூகத்துலயே எங்கேயும் பார்க்க முடியாது! எஸ்பி.எம். அப்படி ஒரு அபூர்வ மனிதர்!” என்று சொன்னதாக திரு.ஏவி.எம்.சரவணன் குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது..எப்போதும் வேலை, வேலை என்றே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ்பி.எம். சொந்த வேலை, குடும்பம் எதைப்பற்றியும் அவர் கவலைப்பட்டதில்லை. பாண்டியன் படம் மூலமாக தனது யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி என்றாலும், அதே நேரம் வாழ்க்கையில் ஒரு பெரும் சோகத்தையும் அவர் சந்திக்க நேரிட்டது. அது பற்றி எஸ்பி.எம். ரஜினி ரூட் தொடரில் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். “ஆரம்பம் முதலே மிக பிசியான நடிகர்களின் படங்களை ஆண்டுக்கு மூன்று, நான்கு படங்கள் என்று தொடர்ந்து இயக்கியதில் நான் என்னுடைய குடும்பத்தை பற்றி நினைக்கவே எனக்கு நேரமில்லை. காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டால், இரவு படுப்பதற்குத்தான் வீடு திரும்புவேன். ஒரு குடும்பத் தலைவன் என்ற முறையில் நான் சரிவர கடமையாற்றத் தவறி விட்டேன். ஒரு முறை ரஜினி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது " ஒரு நாள் ராத்திரி எட்டு மணிக்கு முத்துராமன் சார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டப் போறாரு! அவருடைய மனைவி, கதவைத் திறக்காமலேயே, " சார் ஏவி. எம். ஸ்டுடியோவிலே இருக்காரு" ன்னு சொல்லப் போறாங்க" என்று தமாஷாகக் குறிப்பிட்டார். என் மனைவி, மக்களின் நியாயமான வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று விரும்பி, ஒரு நாள் அவர்களிடம், " ‘பாண்டியன்’ படம் முடிந்ததும், வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டும் ஒப்புக்கொண்டு, உங்களுடன் நிறைய நேரம் செலவிடப் போகிறேன்! இவ்வளவு நாள் நான் செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்; படம் முடிந்தவுடன், நாம் அனைவரும் சிங்கப்பூர், மலேசியா என்று ஒரு டூர் போகலாம்" என்று சொன்னதும், குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி..‘பாண்டியன்’ படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் என் மனைவி நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். இதய சிகிச்சை நிபுணர், "ஆபத்து ஏதுமில்லை; இன்னும் மூன்று மாதங்கள் கழித்து மறுபடியும் ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்து, அவசியமானால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்று சொல்லிவிட்டார். இரவு, சென்னை துறைமுகத்தில் சண்டைக் காட்சியின் படப்பிடிப்புக்குப் புறப்படுவதற்கு முன்பு, "நான் நன்றாக இருக்கிறேன்; கவலைப் படாமல் ஷூட்டிங்கிற்குப் போங்கள்" என்று என் மனைவி கூறினார். மொபைல் போன் இல்லாத அந்தக் காலத்தில் துறைமுக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு போன் செய்து "அவசியமானால் இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்" என்று அந்த அலுவலக எண்ணைக் கொடுத்தேன். அலுவலகத்திலும் எனக்கு வீட்டிலிருந்து போன் வந்தால் தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு படப்பிடிப்பில் பிசியாகிவிட்டேன். சுமார் ஒரு மணி நேரத்தில் உடனே வீட்டுக்கு வரும்படி தகவல் வந்தது. ஜூடோ ரத்தினம் மாஸ்டரிடமும், கேமராமேன் வினாயகத்திடமும் எடுத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியை எப்படி எடுத்து முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். வேகம் வேகமாக வந்தும் வீட்டுக்குள் நுழைந்தபோது என் மனைவியின் உயிரற்ற உடலைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. எதிர்பாராத விதமாக ஹார்ட் அட்டாக் தாக்குதலுக்குள்ளாகி ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதே உயிர் பிரிந்துவிட்டது. வீட்டைப் பற்றிய எந்த நினைவோ, கவலையோ இல்லாமல் சினிமாவுடன் ஒன்றிப் போன எனது வாழ்க்கையில், குடும்பப் பொறுப்புக்களை முழுமையாக கவனித்துக் கொண்டவர் எனது மனைவி கமலா. என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது; அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது; அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. நாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை என்ன என்று எனக்குத் தெரியாது. அனைத்தையும் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது அவர்தான். மனைவி இறந்த இந்த சோகம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அறிவித்தபடி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பல பக்கங்களில் இருந்தும் பிரஷர். என்னுடைய சோகத்தை எனக்குள்ளே அடக்கிக் கொண்டு, என் அன்புக்குரிய மனைவியை இழந்த நாலாவது நாளிலிருந்து பாண்டியன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மூழ்கினேன். இந்த விஷயத்தில் நான் படித்த தேவக்கோட்டை டி. பிரிட்டோ பள்ளி ஆசிரியர் நல்லமுத்துதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் சர்வீசில் லீவு எடுத்ததே கிடையாது. ஒரு நாள் பிற்பகலில் அவரது மனைவி இறந்துவிட்டார். ஆனால், மறுநாள் காலை அவரை பள்ளியில் பார்த்தபோது எல்லோருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி. வீட்டில் சும்மா உட்கார்ந்து சோகத்தில் மூழ்கி இருப்பதைவிட எனது மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதுதான் எனக்கு ஆறுதல்" என்று அவர் கூறினார். அதுவே என்னை எனது பணியில் தொடர்ந்து ஈடுபடவைத்தது. பாண்டியன் படம் திட்டமிட்டபடியே தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்த சமயத்தில் நான் வாசகர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். அவர்களோடு மகிழ்ச்சியாக இருந்து, அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள். என் மனைவி இருந்தபோது, ஒரு கணவராக அவருக்கு உதவ முடியவில்லை; இப்போது நான் ஓய்வாக இருக்கிறேன்; என் மனைவியின் துணை அவசியம் என உணருகிறேன்; ஆனால், “என் கூட என் மனைவி இல்லையே என ஏங்குகிறேன்! இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்பதுதான் எனது வேண்டுகோள்! (தொடரும்)
- எஸ். சந்திரமௌலி இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றாலே போதும் நம் இயக்குனர்களுக்கு தலைகால் புரியாது. மூன்றாவது படமும் வெற்றி பெற்று ஹாட் டிரிக் என்றால், ஐயோ கேட்கவே வேண்டாம். தமிழ் சினிமா வரலாற்றில் அவரைப் போல வெற்றிப் படங்களைக் கொடுத்த வேறு இயக்குனர் கிடையாது. ஆனாலும், அவரது பந்தா இல்லாத எளிமை சினிமாக்காரர்கள் மட்டுமில்லை, அனைவருமே கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம். அவர்தான் டைரக்டர் எஸ்பி. முத்துராமன்.. ஒரு முறை அவரிடம், “சார்! சினிமாவில் வெற்றி பெற எது மிக முக்கியம்? திறமையா? அதிர்ஷ்டமா?”என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்,“ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால், திறமை மிகவும் அவசியம். திறமையில்லாமல் பெறும் வெற்றி நிரந்தமில்லை. ஆனால், எனக்குத் தெரிந்து சினிமாத்துறையில் பலர் புத்திசாலிகளாக, திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் விரும்பிய வெற்றியை பெறமுடிவதில்லை. அதைப் பார்க்கிறபோது, திறமையோடு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது” என்றார். “என்ன ஒரு பிராக்டிகலான பதில்!” என வியந்தேன். பண்பலை ரேடியோக்கள் இல்லாத காலத்தில் விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பு மிகவும் பாபுலராக இருந்த காலகட்டம். கல்கி இதழ் 1984ல் வியாழக்கிழமைதோறும் விவிதபாரதியில் “நேரம் நல்ல நேரம்” என்ற பெயரில் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியை வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் பல பிரலங்களும் பங்கேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாசகர்களின் கேள்விக்கு பதில் சொன்னார் எஸ்பி.எம்.. ‘கவரிமான்’ படத்தை இயக்கியபோது சிவாஜியுடனான ஒரு அனுபவத்தை சொன்னது மறக்க முடியாத பதில். கதைப்படி, சிவாஜியின் மனைவியான பிரமீளா, வேறு ஒருவரோடு படுக்கையில் இருப்பதை திடீரென்று வீடு திரும்பும் சிவாஜி பார்க்க நேரிடுகிறது. காட்சியை சிவாஜிக்கு விளக்கிவிட்டு, டேக்குக்குத் தயாரானோம். ஸ்டார்ட் சொல்ல, கேமரா சுழல ஆரம்பித்தது. அதிர்ச்சி, ஆத்திரத்தில் கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க, சிவாஜியின் முகத்தில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய, உணர்ச்சிகளைக் கொட்டிவிட்டார் சிவாஜி. செட்டில் அனைவரும் பிரமித்துப் போய் நின்றுவிட்டோம். நடித்து முடித்துவிட்டு, சிவாஜி, “என்னப்பா! கட் சொல்லலியா?” என்று கேட்ட பிறகுதான் நாங்கள் எல்லோரும் சுய நினைவுக்கு வந்தோம். சிவாஜி ஈஸ் கிரேட்! என்று குறிப்பிட்டார். ரஜினியை வைத்து மிக அதிக எண்ணிக்கையில் படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்பி.எம். ஒருமுறை அதுபற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ரஜினி பட அனுபவங்கள் பற்றி நிறைய சொன்னார். “சார்! நீங்க எடுத்த ரஜினி பட அனுபவங்களை வைத்து ஒரு தொடர் எழுதலாமே?” என்றேன். உடனே ஓ.கே.சொன்னார். அதுதான் கல்கியில் வெளியான ரஜினி ரூட்..ஒரே சமயத்தில் ரஜினி, கமல் இருவரையும் வைத்து படங்கள் இயக்கியவர். அந்த படங்களை திட்டமிட்டபடி எடுத்து முடித்து ஒரே நாளில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களும் பெரும் வெற்றி பெற்றது தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு சாதனை என்றால் மிகை இல்லை. ஒன்று, கமலை வைத்து எடுக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படமான ‘சகலகலா வல்லவன்’. இன்னொன்று, ரஜினியை வைத்து, வித்தியாசமான கதையோடு எடுத்த சீரியஸ் சப்ஜெக்ட் படமான ‘எங்கேயோ கேட்ட குரல்’. சகலகலா வல்லவன் 175 நாள் ஓடியது. எங்கேயோ கேட்ட குரல் 100 நாள் ஓடியது. இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு ஏவி.எம்.குமரன் சொன்னதை “ரஜினி ரூட்டில்” நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் எஸ்பி.எம். ”இரண்டு படங்களையும் இயக்கியவர் ஒரே இயக்குனரா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. இயக்குனர் பெயரை நீக்கிவிட்டு, புதியவர் ஒருவருக்குப் போட்டுக் காட்டினால், இரண்டு படங்களையும் இயக்கியவர் ஒருவர்தான் என்று சொன்னால் நம்பவே மாட்டார்!” என்று சொல்லிப் பாராட்டினாராம்.. ரஜினி நடித்த “பாண்டியன்’ படத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆரம்பம் முதலே ஒரு சில தொழில்நுட்பக் கலைஞர்களை தனக்கென்று வைத்து ஒரு யூனிட் அமைத்துக் கொண்டு, படங்களை இயக்கியவர் எஸ்பி.எம். அவர் யூனிட்டை ‘எஸ்பி.எம். யூனிட்’ என்றே சொல்லுவார்கள். எஸ்பி.எம்.க்கு உதவி செய்யும் நோக்கத்துடன் ரஜினி ஒரு படம் நடித்துத் தர ஒப்புக்கொண்டபோது, அதன் மூலமாக தான் மட்டும் பயனடைய விரும்பாமல், அதை எஸ்பி.எம் யூனிட் தயாரிப்பாக ஆக்கி, படத்தில் கிடைத்த லாபத்தை தன் யூனிட்டைச் சேர்ந்த அனைவரோடும் பகிர்ந்துகொண்டவர் அவர். ‘பாண்டியன்’ பட பூஜைக்கு பல முன்னணி ஹீரோக்களும் வந்து கலந்து கொண்டார்கள். இத்தனை ஹீரோக்கள் வேறு எந்த படத்தின் பூஜையிலாவது ஒருசேர வந்து கலந்துகொண்டிருப்பார்களா? என்று அன்று பூஜைக்கு வந்த பலரும் வியந்தார்கள். ரஜினி பேசும்போது, “முத்துராமன் சார் சேர்த்து வைத்திருக்கும் சொத்து இதுதான் !” என்று குறிப்பிட்டார். ஒரு சமயம், சினிமாவில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், வழக்கமான அவரது டெக்னீஷியன்களுக்கு பதிலாக “புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து படம் எடுத்துத் தர முடியுமா?” என்று ஒரு சிலர் அவரிடம் கேட்டபோது, “வழக்கமான யூனிட்டை மாற்றுவதற்கில்லை; அவர்களோடு சேர்ந்து படம் பண்ணலாம் என்றால் டைரக்ட் செய்கிறேன். இல்லைன்னா படமே பண்ணலை!” என்று உணர்ச்சி பொங்க சொல்லி டைரக்ஷன் வாய்ப்பினை ஏற்க மறுத்தவர் எஸ்பி.எம். ஒரு முறை “கடமை, மரியாதை, அன்பு, நாணயம் இவை எல்லாம் முத்துராமனின் குணாதிசயங்கள். இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட மனிதரை சினிமா உலகில் பார்க்க முடியாது” என்று சோவிடம் சொன்னபோது, அவர் சிரித்தபடியே,” சினிமா உலகத்துல மட்டும் இல்லை! இன்னிக்கு சமூகத்துலயே எங்கேயும் பார்க்க முடியாது! எஸ்பி.எம். அப்படி ஒரு அபூர்வ மனிதர்!” என்று சொன்னதாக திரு.ஏவி.எம்.சரவணன் குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது..எப்போதும் வேலை, வேலை என்றே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர் எஸ்பி.எம். சொந்த வேலை, குடும்பம் எதைப்பற்றியும் அவர் கவலைப்பட்டதில்லை. பாண்டியன் படம் மூலமாக தனது யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி என்றாலும், அதே நேரம் வாழ்க்கையில் ஒரு பெரும் சோகத்தையும் அவர் சந்திக்க நேரிட்டது. அது பற்றி எஸ்பி.எம். ரஜினி ரூட் தொடரில் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். “ஆரம்பம் முதலே மிக பிசியான நடிகர்களின் படங்களை ஆண்டுக்கு மூன்று, நான்கு படங்கள் என்று தொடர்ந்து இயக்கியதில் நான் என்னுடைய குடும்பத்தை பற்றி நினைக்கவே எனக்கு நேரமில்லை. காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டால், இரவு படுப்பதற்குத்தான் வீடு திரும்புவேன். ஒரு குடும்பத் தலைவன் என்ற முறையில் நான் சரிவர கடமையாற்றத் தவறி விட்டேன். ஒரு முறை ரஜினி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது " ஒரு நாள் ராத்திரி எட்டு மணிக்கு முத்துராமன் சார் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டப் போறாரு! அவருடைய மனைவி, கதவைத் திறக்காமலேயே, " சார் ஏவி. எம். ஸ்டுடியோவிலே இருக்காரு" ன்னு சொல்லப் போறாங்க" என்று தமாஷாகக் குறிப்பிட்டார். என் மனைவி, மக்களின் நியாயமான வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று விரும்பி, ஒரு நாள் அவர்களிடம், " ‘பாண்டியன்’ படம் முடிந்ததும், வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டும் ஒப்புக்கொண்டு, உங்களுடன் நிறைய நேரம் செலவிடப் போகிறேன்! இவ்வளவு நாள் நான் செய்த தவறுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்; படம் முடிந்தவுடன், நாம் அனைவரும் சிங்கப்பூர், மலேசியா என்று ஒரு டூர் போகலாம்" என்று சொன்னதும், குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி..‘பாண்டியன்’ படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் என் மனைவி நெஞ்சு வலிப்பதாகக் கூறினார். இதய சிகிச்சை நிபுணர், "ஆபத்து ஏதுமில்லை; இன்னும் மூன்று மாதங்கள் கழித்து மறுபடியும் ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்து, அவசியமானால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்று சொல்லிவிட்டார். இரவு, சென்னை துறைமுகத்தில் சண்டைக் காட்சியின் படப்பிடிப்புக்குப் புறப்படுவதற்கு முன்பு, "நான் நன்றாக இருக்கிறேன்; கவலைப் படாமல் ஷூட்டிங்கிற்குப் போங்கள்" என்று என் மனைவி கூறினார். மொபைல் போன் இல்லாத அந்தக் காலத்தில் துறைமுக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு போன் செய்து "அவசியமானால் இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள்" என்று அந்த அலுவலக எண்ணைக் கொடுத்தேன். அலுவலகத்திலும் எனக்கு வீட்டிலிருந்து போன் வந்தால் தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு படப்பிடிப்பில் பிசியாகிவிட்டேன். சுமார் ஒரு மணி நேரத்தில் உடனே வீட்டுக்கு வரும்படி தகவல் வந்தது. ஜூடோ ரத்தினம் மாஸ்டரிடமும், கேமராமேன் வினாயகத்திடமும் எடுத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியை எப்படி எடுத்து முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். வேகம் வேகமாக வந்தும் வீட்டுக்குள் நுழைந்தபோது என் மனைவியின் உயிரற்ற உடலைத்தான் என்னால் பார்க்க முடிந்தது. எதிர்பாராத விதமாக ஹார்ட் அட்டாக் தாக்குதலுக்குள்ளாகி ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதே உயிர் பிரிந்துவிட்டது. வீட்டைப் பற்றிய எந்த நினைவோ, கவலையோ இல்லாமல் சினிமாவுடன் ஒன்றிப் போன எனது வாழ்க்கையில், குடும்பப் பொறுப்புக்களை முழுமையாக கவனித்துக் கொண்டவர் எனது மனைவி கமலா. என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது; அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது; அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. நாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை என்ன என்று எனக்குத் தெரியாது. அனைத்தையும் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது அவர்தான். மனைவி இறந்த இந்த சோகம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அறிவித்தபடி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பல பக்கங்களில் இருந்தும் பிரஷர். என்னுடைய சோகத்தை எனக்குள்ளே அடக்கிக் கொண்டு, என் அன்புக்குரிய மனைவியை இழந்த நாலாவது நாளிலிருந்து பாண்டியன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மூழ்கினேன். இந்த விஷயத்தில் நான் படித்த தேவக்கோட்டை டி. பிரிட்டோ பள்ளி ஆசிரியர் நல்லமுத்துதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர் சர்வீசில் லீவு எடுத்ததே கிடையாது. ஒரு நாள் பிற்பகலில் அவரது மனைவி இறந்துவிட்டார். ஆனால், மறுநாள் காலை அவரை பள்ளியில் பார்த்தபோது எல்லோருக்கும் எதிர்பாராத அதிர்ச்சி. வீட்டில் சும்மா உட்கார்ந்து சோகத்தில் மூழ்கி இருப்பதைவிட எனது மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதுதான் எனக்கு ஆறுதல்" என்று அவர் கூறினார். அதுவே என்னை எனது பணியில் தொடர்ந்து ஈடுபடவைத்தது. பாண்டியன் படம் திட்டமிட்டபடியே தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்த சமயத்தில் நான் வாசகர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். அவர்களோடு மகிழ்ச்சியாக இருந்து, அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள். என் மனைவி இருந்தபோது, ஒரு கணவராக அவருக்கு உதவ முடியவில்லை; இப்போது நான் ஓய்வாக இருக்கிறேன்; என் மனைவியின் துணை அவசியம் என உணருகிறேன்; ஆனால், “என் கூட என் மனைவி இல்லையே என ஏங்குகிறேன்! இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்பதுதான் எனது வேண்டுகோள்! (தொடரும்)