”2024ல் ரஷ்ய அதிபர் புதின் இறப்பார்” தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கூற்று பலிக்குமா? 2024-ல் என்ன நடக்கும்?

”2024ல் ரஷ்ய அதிபர் புதின் இறப்பார்” தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கூற்று பலிக்குமா? 2024-ல் என்ன நடக்கும்?

ம் வாழ்க்கை தற்போது டிஜிட்டலை நோக்கி ஓடி கொண்டிருக்கும் சூழலில் பலரும் மூடநம்பிக்கைகளை வெறுத்து வருகின்றனர். இந்த நிலையில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த பாபா வாங்காவின் கருத்துக்களை மட்டும் மக்கள் ஏற்று வருகின்றனர். கண் தெரியாத பெண்ணுக்கு இந்த சக்தி கிடைத்தது எப்படி.

பாபா வாங்காவின் முழுப்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா.1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்த இவர் ஒரு சாதாரண பெண்ணாகவே வலம் வந்தார். சக மனிதர்களை போலவே உலாவி கொண்டிருந்த பாபா வாங்கா தன்னுடைய 12 வயதில் ஒரு விபத்தில் சிக்கி தனது 2 கண் பார்வைகளையும் இழந்தார். அதாவது சித்தி, தந்தையுடன் வளர்ந்து வந்த சாதாரண சிறுமிக்கு 12 வயதில் பல்கோரியாவில் ஏற்பட்ட பெரும் புயலால் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோனது.

வெளியில் நடப்பதை காண முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கபோவதை தன் ஞானக்கண்ணால் கூற ஆரம்பித்தார். 2 கண்கள் பறிபோன பிறகே இவருக்கு இந்த அபூர்வ சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. மின்னல் வீரன் படத்தில் வருவது போன்று மின்னலால் இந்த சக்தி கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

இதனால் மக்கள் இவரை தீர்க்கத்தரிசி என்றே கூறுவார்கள். பொதுவாகவே நடப்பதை நாம் முன்கூட்டியே அறிந்துவிட்டால் அது நம்மை மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தும். அப்படி தான் பாபா வாங்காவின் கணிப்புகள் நடக்கும் போது பொதுமக்கள் அவரை உற்று நோக்க ஆரம்பித்தனர். இப்படியே பாபா வாங்கா பிரபலமாக தொடங்கினார்.

baba vanga
baba vanga

ஆன்மீகவாதியாக மாறிய பாபா வாங்காவை தினசரி ஏராளமானோர் வந்து பார்ப்பார்கள். அப்படி லட்சக்கணக்கான சீடர்களுக்கு மத்தியில் 1996ஆம் ஆண்டு தனது 84 வயதில் இவர் இயற்கை எய்தினார். ஆனாலும் அவர் உலகத்தில் நடக்கும் மொத்த நிகழ்வுகளையும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

குறிப்பாக ரஷ்யா, கிழக்கு ஐரோப்பாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னார் என்ற கதைகள் இணையம் முழுவதும் வைரலாக பரவிவருகின்றன. இவர் இன்னும் 5000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளை கணித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

baba vanga
baba vanga

நடந்த நிகழ்வுகள்:

கொரோனா தொற்று நோய், இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்பு, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணிப்பின் படி நிகழ்ந்துள்ளதாக சீடர்கள் தெரிவிக்கின்றனர்.

2024-ல் என்ன நடக்கும்?

பாபாவாங்காவின் கணிப்பு படி, 2024-ல் மிகப்பெறிய பூகம்பம், தீ, வெள்ளம் போன்ற பேரழிவுகள் வரப்போகிறது. புற்றுநோய்க்கான தீர்வு 2024ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும். ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். 2024ல் உலகப் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 2024ம் ஆண்டில் தன்னுடைய சொந்த நாட்டை சேர்ந்த ஒருவராலேயே படுகொலை செய்யப்படுவார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2024ம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு செவிதிறனை இழப்பார். மேலும் இது அவரது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் நிகழும் மாற்றம்:

மேலும், வரும் 2028ம் ஆண்டு, வீனஸ் கிரகத்துக்கு மக்கள் செல்வார்கள். 2046-ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள். 2100 ஆண்டுக்கு பிறகு, செயற்கைசூரியஒளி உருவாக்கப்பட்டு, இனிமேல் இரவு என்பதே பூமியில் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com