

-ரா. குருராஜன்
"பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சிட்டா மட்டும் போதாது. வீட்லேயும் நல்லா படிக்கிறாங்களான்னு கண்காணிக்கணும். போன வருஷம் முழுதும் தொண்ணூறு, தொண்ணூற்றைந்துன்னு மதிப்பெண் வாங்கின பெண் இப்ப வருஷ முதல் தேர்விலேயே ஒத்தைப்படை மார்க் வாங்கினா என்ன அர்த்தம்? அடுத்த தடவை இதே மாதிரி மார்க் வாங்கினா பள்ளிக்கூடத்தை விட்டே அனுப்பிடுவோம்."
தலைமையாசிரியை உரத்த குரலில் ஆவேசமாக ஆங்கிலத்தில் உறுமினார்.
தலைகுனிந்து நின்றிருந்த வதனா தன் மகள் தன்யாவைப் பார்த்தாள்.
தன்யாவின் கண்களிலும் கண்ணீர்.
"நானே அந்தக் கால எட்டாம் வகுப்பு வரை படிச்சவள். எனக்குப் பிறந்த என் மகள் மட்டும் படிப்பில் அதி புத்திசாலியாக இருப்பாள்னு எப்படி எதிர்பார்க்க முடியும்? தாய் இரண்டடியாவது பாய்ந்தால்தானே குட்டி நான்கடியாவது பாய முடியும்" - தன்னைத் தானே நொந்துகொண்டாள்.