கவலையோ குழப்பமோ.!
கலங்காதிரு மனமே !
துணையாக யாரும்
இல்லையென்றாலும்
தைரியமாக இரு !
தாங்க இயலாத துன்பமென்றாலும்..
தன்னம்பிக்கையோடு இரு !
எக்கணமும்
இயற்கையுடன் இணைந்திரு.
நிதானத்தைக் கடைப்பிடி !
நேரம் ஆக ஆக....
நிலைமை யாவும் சரியாகும் !
நிம்மதி உண்டாகும்.
தெளிந்து நிற்கும் நீரைப்போல...
மனசும் தெளிவாகும்!