
சிலர் வாழ்வில் சில நெறிமுறைகள் சில கோட்பாடுகள் இவைகளோடு துவங்குவாா்கள்.
அந்த வகையில் பலரது வரலாறு அவரது மறைவுக்குப் பின்னாலும் பேசப்படும். பேசப்படவேண்டும். அப்படி ஒரு வரம் அனைவருக்கும் அமையாது.
அவரது மறைவுக்குப் பின்னாலும் அவரது புகழ் தலைமுறைகளைத்தாண்டி போ் சொல்லிவருவது சிறப்பானதே!
அவரது ஊக்கத்திற்கும், கடினாமான உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.
அது பலவிழுதுகளை விட்ட பொியதொரு ஆலமரம்.
அந்த விழுதைப்பிடித்து வளர்ந்தவர்கள் அதிகம் .
அந்த வகையில் ஊாின் பெயர் விளங்க போ்சொல்லும் நபராய் அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தற்போதைய மயிலாடுதுறை) மணல்மேடு, புத்தமங்கலத்தில், அவதரித்த, காலத்தை வென்ற காவிய நாயகர். எழுத்துலக பிரம்மா...
அமரர் கல்கி அவர்கள் ஒரு கிராமத்தில் அவதரிக்கிறாா்.
இன்று அகில உலகமும் அவரை புகழ்கிறதே!
அதுவே ஆண்டவனின் அற்புத விஷயமாகும் .
ஆம், ரா. கிருஷ்ணமூா்த்திஅய்யர் அவர்களின் பிறந்தநாளாம் செப்டம்பர் 9ல் அவரது புகழ்பாட என்னதவம் செய்தேனோ!
மணல்மேடு மாாியாத்தா எல்லாம் அவள் செயலே.
மரியாதைக்குாிய பெருமகனாா் ராமசாமி அய்யர் -தையல்நாயகி அம்மையாா் இவர்களுக்கு அருமைமகனாய் அவதரித்த அஷ்டாவதானியே எங்கள் அமரர் கல்கிஅவர்கள்.
(9.9.1899 - 5.12.1954)
அவர் மணல்மேடு புத்தமங்கலத்தில் திண்ணைப் பள்ளியில் சரஸ்வதிதேவியின் அருளால் படிப்பு துவங்கி, மயிலாடுதுறை தேசியபள்ளியில் தொடர்படிப்பு.
பிறகு மெட்ராஸ் பயணம். பத்திாிகையாளராய் வாழ்வின் ஆரம்பம். கல்கி எனும் புனைப்பெயருடன் எழுத்துப்பணி துவக்கம்.
அவர் ஒரு அவதார புருஷா். பொன்னியின் செல்வன் தந்த புரட்சியாளா்.
எழுத்தே உயிா்மூச்சென வாழ்ந்த வையகம் .
மணல்மேடு புத்த மங்கலம் தந்த புதுமைப்பித்தன்.
சிறுகதைகளின் சிந்தனைச்சிற்பி. புதினங்களின் புதியபூமி.
பரட்சி எழுத்துகளின் புதிய வாா்ப்புகள், என அடுக்கிக்கொண்டே போகலாம்.
பயணக்கட்டுரை தந்த பன்முகம். ஆன்மிக படைப்புகளின் அவதார புருஷா்.
அலை ஓசை தந்த அணையாவிளக்கு. வரலாற்றுப்பு தினங்களின் வரலாற்று நாயகன் .
கதைகளில் கதாபாத்திரங்களை உயிரோடு நிறுத்திய கலங்கரை விளக்கம்.
சுதந்திரப்போராட்டதியாகி. உப்புசத்தியாகிரகம் கண்ட உலகநாயகன்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் கண்ட வெற்றியாளர்.
திருச்சியில் சிறைவாசம். கிடைத்த நட்போ ஶ்ரீமான் அமரர் சதாசிவம். இவர்களின் படைப்பில் வெளிவந்த கல்கி சஞ்சிகை.
தடைகள் பல தாண்டி கல்கிஅவர்களின் தைாியம், துணிச்சலால், எழுத்தாற்றலால், மீண்டும் புதிய உதயமாகியதே பெருமாயான ஒன்று. எண்பது ஆண்டுகளுக்கு மேலாய் தனிஒரு ராஜாஙகம் நடத்தி," கல்கி கையில் இருந்தால் பெருமை, படித்துப்பாா்த்தால் அருமை "என்ற வாசகங்களாடு வாசகர்களின் இதயம் கவர்ந்த கல்கி இன்றளவும் ஆன்லைனில் கோலோட்சி வருவது குதூகலமான விஷயம் மட்டுமல்ல, பாராட்டப்படவேண்டிய ஒன்று என்றால் அது மிகையல்ல.
போராளி மட்டுமல்ல, நகைச்சுவை நவரசம் தந்த நல்லவர், வல்லவர், எழுத்தால் தைாியமான தலையங்கம் தந்தவர்.
இசைவிழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பன்முகமான கட்டுரை தந்ததே கல்கிதான்.
வட்டமேஜையில் கடைக்கோடி வாசகர்களின்கருத்தை வெளியிட்டு அவர்களுக்கு முகவரி தந்ததே கல்கி இதழ்தான்.
எனது முகவரியும் வட்டமேஜையில்தான் துவக்கமானது என சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்வேன்.
கல்கி அவர்கள் சோதனைகள் பல தாண்டிய சோழராஜன்.
கள்வனின் காதலியில் முத்திரை பதித்த முதன்மையானவர்.
பலரது முகத்திரையை கிழித்த முகில். தர்மம் கடைபிடித்த தங்கமகன். தேசப்பற்றின் உயா்நாடி.
எளியவர், வலிமைமிக்க வந்தியத்தேவன்.
1924ல் ருக்மணி அவர்களுடன் திருமண பந்தம்.
ஆசைக்கு ஒன்று ஆனந்தி, ஆஸ்திக்கு ஒன்று ராஜேந்திரன்.
நவசக்தி இதழில் துணை ஆசிாியராய் கால் பதிப்பு.
ராஜாஜியின் தோளாடு தோள் கண்ட தோழர் .
ஆனந்த விகடனில் முத்திரை பதிப்பு. அவரது எழுத்து நயத்தால் தைாியமான எழுத்துக்களால் கல்கி ஏடு ஈடு இணையில்லா இதழானதே வரலாறு. எழுபத்திஐந்திற்கு மேற்பட்ட சிறுகதைகள்.
சரித்திர நாவலகள் சில, பல புதினங்கள் அவைகளில் சில வெள்ளித்திரையில் வலம் வந்ததும் பெருமையிலும் பெருமைதானே!
எடுத்துக்காட்டாய் ரங்கூன் ராதையை சொல்லவா?
மாலதியின் தந்தையை அழைக்கவா? சந்திரமதியை சாட்சிக்கு அழைக்கவா? கவர்னர் வண்டில் பிரயாணம் மேற்கொள்ளவா?
சாகித்ய அகாடமி விருதை பகிரவா? இப்படி அவர் படைப்புகளை பட்டியலிடலாமே!
எழுத்துலகில் சரித்திரம் படைத்த சக்கரவர்த்தி திருமகனாாின் புகழை ப்பாட அவர்தம் பிறந்த நாளில் படைப்பை பயத்துடன், பரவசத்துடன், படைக்கிறேன்.
அந்த அவதார புருஷனின் ஆசியோடு ஆன் லைன் அவையில் பணிவுடன் சமர்பிக்கிறேன்.
குற்றங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். மன்னியுங்கள், திருத்திக் கொள்கிறேன். சுருக்கம் செய்வதானால் சுருக்கம் செய்யுங்கள், ஏற்றுக்கொள்கிறேன். அவரது பிறந்த நாளில் அவர்தம் கொள்கையைய் கடைபிடித்து *பொிதினும் பொிது கேள்* என்ற அடிப்படையில் எழுதியுள்ளேன்.
அமரர் கல்கி புகழ் என்றும் நிலைத்திருக்கும்,
அவரது இதழில் தொடர வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
அவர்தம் பாதையில் பயணிக்க வாய்ப்பளித்த நல்லவர் வல்லவர்களுக்கு வாழ்நாள் நன்றி".
வணக்கங்களுடன் நா.புவனாநாகராஜன், செம்பனாா்கோவில்.