இல்லறமாம் நல்லறம்
இனிதாய்க் கால்வைப்பு.
மகிழ்வாய்ப் புகுந்த
மனைவிக்குப் பணி.
அடுப்பங்கரையில்
அட்டிட வேண்டும்.
அட்டதை நிரப்பணும்
அழகாய்க் கலனில்!
பசியோடு அட்டு
பசித்தோர்க்கு நாளும்
புசித்திடக் கொடுத்து
புசித்திட வேண்டும்.
பழையதை முகர்ந்தே
பார்த்திட வேண்டும்.
கெட்டதை உண்டால்
கேடு உண்டாம்.
முகர்ந்தே அறிந்திடு
உகந்தே அட்டிடு.
அடுமனையில் பூனையாய்
அடங்கியே பதுங்கணும்.
குட்டிகளை ஈன்ற
குதூகலப் பூனையாய்
குடும்பத்தில் உள்ளோர்க்கு
குதூகலத்தைத்
தந்திடணும்.
கவனமாய் இருந்தே
காரியங்கள் ஆற்றிடணும்
உணவை மருந்தாக
ஊட்டச்சத்தோடு அட்டிட
விடியலில் விழிப்புநிலை
விரைந்தே அடைந்திடணும்.
நாளுக்கொரு சமையல்
நாமுமறிந்து சமைத்திடணும்.
அறுசுவையோடு
அட்டதை
அளவாய் உண்டிடணும்.
இப்படி, அடுப்பங்கரை பூனையாய்
அடங்கியே
இருக்காமல்
புதுமை பலசெய்து
புரட்சிப்பெண்ணாய்
வாழ்ந்திடணும்.
-செ.கலைவாணி
மெல்போர்ன்.