நீங்களும் துப்பறியலாம்: அறிவுக்கு வேலை தரும் புதிர் கதைகள்!

Murder, Logic, and Mystery: A Quiz Set
The Detective's Challenge: Can You Solve These?
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

உங்களுக்குள் ஒரு துப்பறியும் சாம்பு, நரேன், வைஜ், விவேக், ரூபலா அல்லது பரத்-சுசீலா இருக்கிறார்களா? அவர்களைத் தட்டி எழுப்புங்கள்! ( சென்னிமலை ஜேசீஸ் நற்பணி மன்ற இலக்கிய விழாவில் நடத்திய போட்டியில் இருந்து )

புதிர் 1: கொலையாளி யார்?

Newspaper clue murder mystery
Newspaper clue murder mystery

சம்பவம்:

ஒரு பணக்காரர், ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். அவர் வீட்டுக்கு பால்காரர், பேப்பர் போடும் பையன், தபால்காரர் மற்றும் கூரியர் பாய் ஆகிய நால்வர் தான் ரெகுலராக வருபவர்கள்.

ஒருநாள் தபால்காரர் அந்த வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்திருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, அந்தப் பணக்காரர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சோதனையில் கிடைத்த தடயங்கள்:

  • வாசலில் இரண்டு, மூன்று பால் பாக்கெட்கள் பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கின்றன.

  • 7 கூரியர் கவர்கள் பிரிக்கப்படாத நிலையில் கிடக்கின்றன.

  • ஆனால், ஒரே ஒரு நாள் நியூஸ் பேப்பர் மட்டுமே அங்கு கிடக்கிறது.

வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்ததற்கான (Forced Entry) எந்த அடையாளமும் இல்லை. எனவே, புதிய நபர் யாரும் உள்ளே வரவில்லை; ஏற்கனவே அறிமுகமான நபர் தான் கொலை செய்திருக்க வேண்டும். அது யாராக இருக்கும்?

விடை:

நியூஸ் பேப்பர் போடும் பையன் தான் கொலையாளி.

விளக்கம்: பால்காரர், கூரியர் காரர் மற்றும் தபால்காரர் ஆகியோர் தங்களது வேலையைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் (அதனால்தான் பல நாட்களுக்கான பால் பாக்கெட்டுகளும் கூரியர்களும் அங்கே தேங்கிக் கிடந்தன).

ஆனால், பேப்பர் காரர் மட்டும் ஒரு நாளுக்கு மேல் பேப்பர் போடவில்லை. "இனி பேப்பர் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன? ஆள் தான் உயிரோடு இல்லையே, நாம்தானே கொலை செய்தோம்!" என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. இந்த ஒரு சிறிய 'லூப் ஹோல்' மூலம் அவன் மாட்டிக்கொண்டான்.

குறிப்பு: ஒவ்வொரு கொலையாளியும் ஏதாவதொரு தடையத்தை விட்டுச் செல்வான் என்பது இதில் நிரூபணமாகிறது.

இதையும் படியுங்கள்:
மலர் மருத்துவ மேஜிக் : சன்ஸ்கிரீன் இனி தேவையில்லை!
Murder, Logic, and Mystery: A Quiz Set

புதிர் 2: விஷம் எங்கே இருந்தது?

Poisoned apple juice
Poisoned apple juice

இரண்டு பெண்களுக்கு இடையே நீண்ட நாட்களாகப் பெரும் பகை; பேசிக்கொள்வதே இல்லை. ஒருநாள், அந்த ஒரு பெண் மற்றவரைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறார். "இத்தனை நாள் விரோதமாய் இருந்துவிட்டு இப்போது ஏன் அழைக்கிறார்?" என்ற சந்தேகம் இருந்தாலும், அழைப்பை ஏற்று அவர் வீட்டிற்குச் செல்கிறார்.

சம்பவம்:

விருந்துக்கு அழைத்த பெண், ஃபிரிட்ஜில் இருந்து ஒரு ஜக் நிறைய ஆப்பிள் ஜூஸ் எடுத்து வருகிறார்.

  • விருந்தாளிக்கு: ஒரு டம்ளர் ஜூஸ் ஊற்றி, அதில் ஐஸ் க்யூப்ஸ் போட்டுத் தருகிறார்.

  • அழைத்த பெண்: அதே ஜக்கில் இருந்து தனக்கு ஜூஸ் ஊற்றிக்கொண்டு, ஐஸ் க்யூப்ஸ் போட்டு வேகவேகமாக 3 டம்ளர் ஜூஸ் குடிக்கிறார்.

விருந்திற்கு வந்த பெண், தன் டம்ளரில் இருந்த ஜூஸை ஐஸ் க்யூப்ஸ் கரைந்த பிறகு, மிகவும் நிதானமாகக் குடிக்கிறார். ஆனால், குடித்த அரை மணி நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிடுகிறார்.

துப்பறியும் போலீஸ்:

போலீஸ் வந்து சோதனை செய்கிறது. ஆப்பிள் ஜூஸில் விஷம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். ஆனால், அதே ஜக்கில் இருந்த ஜூஸை 3 டம்ளர் குடித்த பெண் உயிருடன் இருக்கும்போது, ஒரு டம்ளர் குடித்த விருந்தாளி மட்டும் எப்படி இறந்தார் என்று இன்ஸ்பெக்டர் யோசிக்கிறார்.

நீங்களும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

விடை:

விஷம் ஆப்பிள் ஜூஸில் இல்லை, ஐஸ் க்யூப்ஸில்தான் கலக்கப்பட்டிருந்தது.

விளக்கம்: பொதுவாக ஐஸ் கட்டிகள் கரைய நேரம் எடுக்கும். கொலையாளி (அழைத்த பெண்), ஐஸ் கட்டிகள் கரைவதற்கு முன்பே வேகவேகமாக மூன்று டம்ளர் ஜூஸையும் குடித்து முடித்துவிட்டார். அதனால் விஷம் அவர் உடலில் சேரவில்லை. ஆனால், விருந்திற்கு வந்த பெண் நிதானமாகப் பருகியதால், ஐஸ் கட்டிகள் முழுவதுமாக ஜூஸில் கரைந்து விஷமாக மாறியது. அதை அவர் குடித்ததால் உயிர் பிரிந்தது.

சினிமா உதாரணம்: 'ஒரு தாயின் சபதம்' கிளைமாக்ஸ் நீதிமன்றக் காட்சியில், டி.ஆர் (T. Rajendar) அவர்கள் விஷம் கலந்த பாட்டிலைச் சாட்சியாகக் காட்டி, அது விஷமில்லை என நிரூபிக்கத் தானே குடித்துவிட்டு, பின் உடனடியாக வெளியேறி மருத்துவமனை சென்று உயிர் பிழைப்பார். அதுபோன்ற ஒரு தந்திரமே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை... ஒரு சாதா பலூன் சொல்லும் தத்துவம்!
Murder, Logic, and Mystery: A Quiz Set

புதிர் 3: தெய்வீகக் குளமும் மாலைகளும்

Magic temple pool math puzzle
Magic temple pool math puzzle

ஒரு புகழ்பெற்ற ஆலயம்; அங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிலைகள் தனித்தனியாக இருக்கின்றன. அந்த ஆலயத்தின் அருகில் ஒரு 'தெய்வீகக் குளம்' இருக்கிறது. அந்தப் பொய்கையின் மகிமை என்னவென்றால், யாராவது கையில் மாலைகளுடன் அக்குளத்தில் மூழ்கி எழுந்தால், கையில் இருக்கும் மாலைகளின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகும் (Double).

நிபந்தனைகள்:

ஒருவர் சில மாலைகளுடன் அந்த ஆலயத்திற்கு வருகிறார். அவர் பின்வரும் நிபந்தனைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்:

  1. ஒவ்வொரு சிலைக்கு மாலை சூட்டும் முன்பும் குளத்தில் மூழ்கி எழ வேண்டும்.

  2. மூன்று சிலைகளுக்கும் சம எண்ணிக்கையிலான மாலைகளைச் சூட்ட வேண்டும்.

  3. கடைசி சிலைக்கு மாலை சூட்டிய பிறகு, கையில் எந்த மாலையும் மீதம் (Pending) இருக்கக்கூடாது.

உதாரணத்திற்கு: அவர் 1 மாலையுடன் வருகிறார் என்று வைப்போம். குளத்தில் மூழ்கினால் அது 2 ஆகும். முதல் சிலைக்கு 1 மாலை போட்டால் மீதி 1 இருக்கும். மீண்டும் குளத்தில் மூழ்கினால் அது 2 ஆகும். இரண்டாவது சிலைக்கு 1 போட்டால் மீதி 1 இருக்கும். மீண்டும் மூழ்கினால் அது 2 ஆகும். மூன்றாவது சிலைக்கு 1 போட்டால் கையில் 1 மீதி இருக்கும். இப்படி இருக்கக்கூடாது.

அப்படியென்றால், அவர் கொண்டு வந்த மாலைகள் எத்தனை? ஒவ்வொரு சிலைக்கு அவர் சூட்டிய மாலைகள் எத்தனை?

விடை:

அவர் கொண்டு வந்த மாலைகள் 7; ஒவ்வொரு சிலைக்கு அவர் சூட்டிய மாலைகள் 8.

விளக்கம்:

  • முதல் நிலை: 7 மாலைகளுடன் குளத்தில் மூழ்குகிறார். அது இரட்டிப்பாகி 14 ஆகிறது. அதில் 8 மாலைகளை முதல் சிலைக்குச் சூட்டுகிறார். மீதி கையில் இருப்பவை: 6.

  • இரண்டாம் நிலை: மீதமுள்ள 6 மாலைகளுடன் மீண்டும் குளத்தில் மூழ்குகிறார். அது இரட்டிப்பாகி 12 ஆகிறது. அதில் சம எண்ணிக்கையில் 8 மாலைகளை இரண்டாவது சிலைக்குச் சூட்டுகிறார். மீதி கையில் இருப்பவை: 4.

  • மூன்றாம் நிலை: மீதமுள்ள 4 மாலைகளுடன் மீண்டும் குளத்தில் மூழ்குகிறார். அது இரட்டிப்பாகி 8 ஆகிறது. அந்த 8 மாலைகளையும் மூன்றாவது சிலைக்குச் சூட்டுகிறார்.

இப்போது அவர் கையில் மாலை ஏதும் மிச்சம் இல்லை. கணக்குச் சரியாக முடிந்தது!

இந்த சுவாரஸ்யமான புதிர்கள் உங்கள் மூளைக்கு நல்ல விருந்தாக அமைந்திருக்கும் என நம்புகிறேன். நீங்களும் இது போன்ற புதிர்களை எழுதி அனுப்பலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com