கவிதை: பிரிவோம்! இணைவோம்!

Lovers
LoversImg Credit: Christy Nallarethinam
Published on

பிரிவில் வாடிய அவன்!

துயரை சேமிக்கும் இவள்!

இவர்களின் சந்திப்பு தற்செயல்தான்!

காலப் போக்கில் இருவரும் - நேச வயத்தில் அகப்பட்டவர்களாய்,

கூண்டில் வாழும் ஜோடிக் கிளிகளாய்,

ஒன்று சேரத் துடிக்கும் - பறவை

திமிங்கிலத்தின் வாஞ்சையுள்ளவர்களாய்,

எட்டா உயரத்தில் நீண்ட தூரம் பயணிக்க ஆசையுள்ளவர்களாய்!

தன் துயரைப் பகிர்ந்து கொள்ளும் - மன வைத்தியர்களாய்!

வாழும் இவர்களின் நிலைமையோ..!

வெள்ளத்தில் தத்தளிக்கும் துணையைப் பிரிந்த பறவையை போன்றது.

மீண்டும் சொந்த இடத்தை அடைய இயலா துயர்!

பிரிவொன்று நேர்ந்தது!

சூழ்நிலையாகிய வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இவர்களின் நிலையறிந்து,

நீர்களின் தலைவன், கதிரவனிடம் வரம் கேட்டு!

இதையும் படியுங்கள்:
கவிதை: அபாயக் கனவு!
Lovers

வெள்ளத்தை வற்ற செய்து

பிரிவை நீக்கி!

இணையைக்  காணச் செய்த -

வருணனின் கருணை

எவ்வளவு அழகானது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com