

சுத்தியலால் மேஜை மேல் தட்டி அமைதியை நிலை நாட்டிவிட்டு, தனது தீர்ப்பை படித்தார், நீதிபதி.
‘இந்த விசாரணை மூலம் சூளை முதலாளி எங்கே தமது கற்பைச் சூரையாடிவிடுவாரோ என்று பயந்தே அவரை அரிவாள்மனையால் வெட்டியிருக்கிறார் இந்தப் பெண். கொலைசெய்யப்பட்ட முதலாளி ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் நிறையவே பலவீனமானவர் என்பதை சூளையில வேலை செய்யும் பெண்மணிகள் கொடுத்த வாக்குமூலங்களின்படி நிரூபனமாகியும் உள்ளது. அதனால் செந்தாமரை அவரை வெட்டியது தனது கற்பைக் காத்துக்கொள்ளத்தான் என்பது நியாயமே என்றாலும், உடனே அவர் போலீசில் சரணடைந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவரது உடலை சூளைக்குள் போட்டு எரித்துவிட்டார். அது தடயத்தை அழிக்கும் குற்றமாகும். அதற்காக அவருக்கு ஏழு வருடங்கள் கடுங்காவல் தடனை அளிக்கிறேன்...”