அன்று புதன்கிழமை. வழக்கம் போல கைப்பேசியில் செட் செய்யப்பட்டிருந்த அலாரம் அன்றும் சதி செய்ததால் அயர்ந்து உறங்கிவிட்டிருந்தான் சங்கர். திடீரென எங்கோ மணியோசை ஒலிப்பதைக் கேட்டு அரைத் தூக்கத்தில் விழித்தான் சங்கர்.
பக்கத்து வீட்டு பூஜை அறையிலிருந்து ஒலிக்கும் மந்திரங்களும் மணியோசையும் அந்த அதிகாலை நேர அமைதியைக் கிழித்துக் கொண்டிருந்தன. அவசரமாக எழுந்து தனது கைப்பேசியில் மணி என்ன என்று பார்த்தவன் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான்.
"அய்யய்யோ! இவ்ளோ லேட்டா ஆயிடுச்சா? இந்த புராஜெக்டை முடிக்க இன்னும் எவ்வளவோ வேலை இருக்கே!" என்று புலம்பிக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான். நேராக சென்று அவசர அவசரமாக பல் துலக்கி குளித்து முடித்து, தயாரானான் .
காலையில் ஆபீஸ் போகும் அவசரத்தில் டீ குடிக்க கூட நேரமில்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பறந்தான். நேற்று முழுவதும் வேலை செய்தும் முடிக்க முடியாத புராஜெக்ட்டின் கவலை அவனை வாட்டியது.
நெரிசலான சாலைகளைத் தாண்டி, சிக்னல்களில் காத்திருந்து, பல வாகனங்களை முந்திக்கொண்டு, ஏதோ பந்தயத்தில் ஓடுவது போல தன் அலுவலகத்தை அடைந்தான்.
அவன் வந்த வேகத்தைக் கண்டு சக ஊழியர்கள் ஆச்சரியப்பட்டனர்.
"என்ன சங்கர், இன்னைக்கு ரொம்ப லேட்டா?"
"ஆமாம், அந்த புராஜெக்ட் இன்னும் முடியலையேன்னு பயங்கர டென்ஷனா இருக்கு." என்றான் சங்கர்.
தன் இருக்கையில் அமர்ந்து கணினியை ஆன் செய்து வேலையில் இறங்கினான். மணிக்கணக்கில் வேலை செய்தும், எந்த முன்னேற்றமும் இல்லாதது போல் தோன்றியது. பசியும் எடுக்கவில்லை.
மிகப்பெரிய மனக் குழப்பத்தில் இருந்த அவனை மதிய உணவு நேரத்தில், அவனது நண்பன் ரமேஷ் சமாதானப்படுத்த முயன்றான்.
"சங்கர், இப்படி டென்ஷன் ஆகாதே. எல்லாம் சரியாகிடும். நீ கவலைப்படுற அளவுக்கு எதுவும் பெரிய விஷயம் இல்லை. Take It Easy, All Is Well டா" என்றான்.
ரமேஷின் வார்த்தைகள் அவனுக்கு சிறிது ஆறுதலை அளித்தன. அவன் சற்று நிதானமாகி, வேலையைத் தொடர்ந்தான். மாலையில், அவனது அந்த முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. அவனுக்கு புதிய உத்வேகம் பிறந்தது.
நள்ளிரவு நேரம் வரை உழைத்து, கடைசியில், புராஜெக்டை முடித்துவிட்டான்.
மறுநாள், அவனது புராஜெக்டை பார்த்த அவனது மேலாளர் அவனைப் பாராட்டினார்.
"Shankar, You did a great job. Your dedication and hard work are truly appreciated."
சங்கர் மனம் நிறைந்தான். வீடு திரும்பும் வழியில், தன் கவலைகளுக்காக வருந்தினான். அந்த பூஜை அறையிலிருந்து மீண்டும் மணியோசை கேட்டது.
"ஆமாம், All is well..." என்று புன்னகைத்தான்.