

வேலைக்காரி சொக்கம்மா
அவ மனம் சொக்க தங்கமம்மா
வாயில் நாலே நாலு பல்லம்மா
ஆனாலும் சிரிப்பா வெல்லமா
உடுக்க ஒரே ஒரு கிழிச புடவை
இருந்தது குள்ள ஓட்டை குடிசை
கணவன் எப்போதோ மறைந்தான்
ஒரே மகன் இருந்தான்
அவனும் ரயில் மோதி இறந்தான்
மாதமெல்லாம் வேலை செய்வா முதுகொடிஞ்சு
கிடைக்கும் வீட்டுக்கு ரூபாய் தலா அஞ்சு
எனக்கு அப்போ வயசு ஆறு
காலு நசுங்கி போனது... ஏறினது காரு
நான் ஆஸ்பத்திரி போன போது
என் மேல் அக்கறையில் அழுதா
நலம் பெற நாள் முழுதும் தொழுதா
நினைப்பேன் நான் அதை எப்போதும்
நன்றி சொல்லுவேன் இப்போதும்
ஒருநாள் விஷ ஜுரத்தில் கிடந்து
போனாள் சாப்பிடாமல் மருந்து
சொக்கம்மா ஒரு தேவதை
சொல்ல முடியும் நான் வேறெதை
கழிக்க வந்தாளோ ஏதோ சாபத்தை?
அல்லது கடுகளவு பாபத்தை? இன்று
போய் விட்டாள் நோக்கி வானத்தை!