

பொழுது விடிந்தது. சேவல் கூவியது.
செல்வி முகத்தை கழுவி விட்டு, ஒரு செம்பு தண்ணீரை குடித்துவிட்டு, கதவை மெல்ல சாத்தியபடி, செப்பலை போட்டுக்கொண்டு வெளியங்காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இங்கு வீட்டில், முத்துச்சாமி மெல்ல கதவை திறந்தார். தங்கக் குட்டி மகள் அழகாக படுத்திருப்பதை அருகில் உட்கார்ந்து இரசித்தார்.
“செல்ல குட்டிமா”என்றபடி மகளின் கன்னத்தில் முத்தமிட்டார்.
சத்யா லேசான பார்வையில் அப்பாவை பார்த்ததும், உடனே எழுந்திருச்சு அப்பாவை கட்டிப் பிடித்தாள். சந்தோஷத்தில் வார்த்தைகள் ஒன்றும் வரவில்லை. முத்துச்சாமி மகளை விடாமல் கொஞ்சி, பாச மழையில் நனைத்தார்.
“சத்தி குட்டி உனக்காக அப்பா புது ட்ரஸ்சு, ஸ்வீட்டு, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்..” என்றபடி மகளிடம் புது ட்ரெஸ்சை கொடுத்தார்.
வெளியங்காட்டிற்குச் சென்ற செல்வி வீடு திரும்பினார். கை, கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் சென்றவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.