தொடர்கதை: தீபாவளியின் மறுபக்கம் - அத்தியாயம் 1

தொடர்கதை | Mother and daughter
தொடர்கதை | Mother and daughterImage credit: AI Image
Updated on
MM strip
MM strip

வானம் கருகருவென்று மேகமூட்டத்துடன் இருந்தது. மேகத்திற்குள் மின்னல் அங்கும் இங்கும் பளிச் பளிச்சென்று வந்து மறைந்தது. சூரியன் மறைந்து மெல்ல இருள் சூழ ஆரம்பிக்கும் நேரம் அது…! குருவிகளும், காக்கைகளும் தங்களின் கூட்டை நோக்கி பறந்த வண்ணம் இருந்தன. 

அப்போது செல்வி வேலை முடிந்து களைப்புடன் ஒத்தையடிப் பாதையில் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். உடம்பெல்லாம் ஒரே வெடி மருந்து வாடை குப்பென்று அடித்தது. வெடி மருந்தால் கையெல்லாம் அடர் கருப்பாக மாறியிருந்தது. 

நடந்து வரும்போதே, இருமல் வாட்டியெடுத்தது. கையை மூக்குக்கு கொண்டு போகாமல், திக்கு முக்காடி எப்படியோ வீட்டை அடைந்தார். 

வீட்டிற்கு வெளியே நின்று மகளிடம், “சத்தி குட்டி அம்மாக்கு சுடுதண்ணி கொண்டு வாமா..!” 

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com