

இளம்பிறை தெளிவாகச் சொன்னாள். “பாரு சினேகா.. அருண் கண்ணு முழிச்சாச்சு. மாப்பிள்ளையை அலங்கரிச்சு, ரெடி பண்ணி தாலி கட்ட வைக்க அவங்க எல்லோரும் தயார். சம்மதமா உனக்கு. முழுமனசோட அருணைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”
“வேணாம். என் மனசு உடைஞ்சு போச்சு. என் எதிர்பார்ப்புக, ஆசை, கனவெல்லாம் கலைஞ்சு போச்சு. இடம், பொருள், சூழல் உணராம, விடிஞ்சா கல்யாணம்றது கூட உறைக்காம, இப்படி குடிக்கு அடிமையா இருக்கறவன் கூட, வாழ்க்கை நடத்த நான் தயாரா இல்லை. எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம். உறுதியா வேணாம்.”
“பாரு, ஒரு பொம்பளைப் பிள்ளையா அடக்கமா நடந்துக்கோ. அதான் சரியாயிடுச்சுல்ல எல்லாம். அப்புறமென்ன மறுபடியும்.? எங்களுக்கு ஒண்ணும் இல்ல.. தட்டிவிட்டுட்டு போயிட்டே இருப்போம். அப்புறம் உனக்குத் தான் கல்யாணம் நடக்காது, காலம் முழுக்க கண்ணீர் சிந்தனும்.”
இளம்பிறை பொங்கி எழுந்தாள்.