

முகுந்தன் கைகளால் முகத்தை இறுக மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.
“முகுந்த்… முகுந்த்… டேய் என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டவாறு அவனது கைகளை விலக்கி அருகில் அமர்ந்தான் அருண்.
“ப்ச்… ஒண்ணும் இல்ல அருண். விடு…” என்று கையை எடுத்துக் கொண்டான்.
“டேய், என்ன விளையாடறியா? 'அவசரமா முக்கியமான விஷயம் பேசணும், உடனே வா’ன்னு சொல்லிட்டு இப்ப ஒண்ணும் இல்லன்னா என்னடா அர்த்தம்?” என்று அருண் அவன் முகத்தை நிமிர்த்தினான்.
முகுந்தின் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன.
“ஹேய் பேபி… என்னடா இப்படி? சொல்லுடா…” என்றவன், “இங்க பேச வேண்டாம். வெளியே போய் பேசலாம்,” என்று அவனை அழைத்து ஊட்டி கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றான்.
வெளியில் மெதுவான பனித்துளிகள் விழுந்துக் கொண்டிருந்தது. ஊட்டியின் குளிர் அந்த இரவையே சோகமாக மாற்றியிருந்தது. இருவரும் சில நிமிடங்கள் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
சாப்பிட்டு முடித்த பிறகு நீண்ட நேரம் அமைதியாக இருந்த முகுந்த், மெதுவாக,