சிறுகதை: கால் கட்டு!

Tamil short story - Husband, Wife, Father In law, Mother In Law and Son
Tamil short story - Husband, Wife, Father In law, Mother In Law and Son
Updated on
mangayar malar strip
Mangayar Malar

"அம்மா... மம்மி... கதவை திறம்மா..."

தீபக் எப்போதும் போல குடித்து விட்டு நிற்கக் கூட முடியாமல் தள்ளாடிக் கொண்டே கதவை தட்டினான்.

"போ போ உன் அருமை மகன் வந்திருக்கான், போய் கதவை திற..." என்றாள் மகள் வாணி.

மரகதம் போய் கதவை திறந்து, "சீக்கிரம் உள்ளே வாடா, ஏண்டா தினமும் இப்படி வர்ற?", என்று சொல்லி விட்டு அவனை வேகமாக உள்ளிழுத்து கதவை தாளிட்டாள்.

"மம்மி பசிக்குது... என்ன இருக்கு?"

"நீ தயவு செய்து உன் ரூமுக்கு போயிடு, சாப்பாடு நான் கொண்டு வர்றேன், உங்க அப்பா எழுந்துட்டா போச்சு அவ்வளவுதான்" என்று அவனை துரத்தினாள். பிறகு சாப்பாட்டை கொடுத்து அவனை ஒரு வழியாக படுக்க வைத்தாள் மரகதம்.

காலையில் தீபக் எழுந்து, ஒன்றுமே நடக்காதது போல தந்தையிடம், "Hi dad, good morning" என்றான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com