

ஒரே ஒரு வரி பேட்டியில் மொத்த மீடியாக்களும், பப்ளிக்கும் பரபரப்பாகப் பேசிக்கொள்ளும் டாபிக் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. “பொள்ளாச்சி பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்குப் பெண்களும் ஒரு காரணம்; ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியுமா?” என டைரக்டர் லக்கி கிங் ஒரு சினிமா பட விழாவில் பேசியது சென்சேஷனல் நியூஸ் ஆனது.
டைரக்டர் லக்கி கிங்கின் ஒவ்வொரு படமுமே வெள்ளிவிழாதான். அவர் பெண்களை மதித்து படம் எடுத்தவர்; பெண்களின் பிரச்னைகளை மையமாகக்கொண்டே அவரது ஒவ்வொரு படக் கதைக்கருவும் இருக்கும். எல்லாப் படங்களும் ஹிட் ஆனதால் அவருக்கு 'லக்கி கிங்' என்று பெயர் வந்தது. அவரது பட வசனங்கள் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றியும், பெண்கள் பெருமை பேசுவதாகவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பற்றியதாகவே இருக்கும். எல்லாரும் ரசிக்கும்படி சொன்னவர் இவர் ஒருவரே. இப்படிப்பட்ட டைரக்டர்தான் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.