சிறுகதை: பூவம்மா

Old Couple travel on plane
Old Couple
ஜி. சியாமளா கோபு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 “PRESIDENT OF INDIA” SHRI PRANAB MUKERJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம். மாண்பிமிகு அய்யா மறைந்த திரு.அருணோதயம் அருணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் என்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். அநேக சிறுகதைகள் வல்லினம், திண்ணை, பதாகை, குட் புக், My vikatan ல், Amazon kindle, Pustaka, கல்கி ஆன்லைன் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல சிறுகதைகள் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளன. அது போக என் பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டவள்.

Updated on

"என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள் செல்லம்மா பாட்டி. எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை அதக்கிய வாயோடு இவள் பேசுவதை புரிந்து கொள்வது கேக்கறவங்க பாடு. ஆனால் இப்போது அப்படியில்லை. மென்னு மென்னு சாரற்ற வெத்திலையை விட இந்த சங்கதி அதி முக்கியம். ஆட்டைப் பிடித்துக் கொண்டு போகும் பூவம்மாவை கேட்டாள் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த செல்லம்மா பாட்டி. "போயிட்டு வரையில மறக்காம எனக்கு ஒரு தைல குப்பி வாங்கியா பூவு. முட்டுவலி ஆளைக் கொல்லுது."

"உக்கும். இங்கே போவறதுக்கே அடி வயிறு கலக்குது" என்று நொடித்துக் கொண்டு நடந்தாள் பூவம்மா. கொஞ்ச நிலபுலமும் ஆடு மாடு கோழிகளும்.. ஒரே ஒரு மகளும்தான் பூவம்மா மணியன் தம்பதிகளுக்கு. இவர்கள் மகள் கண்மணி படிப்பிலும் அறிவிலும் மகா கெட்டி. அழகிலும் அம்சமானவள் தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com