அபூர்வ சக்தி கொண்ட அற்புத பானம்!

அபூர்வ சக்தி கொண்ட அற்புத பானம்!
Published on

ஆப்பிள்- ஏ, பீட்ரூட்-பி, கேரட்-ஸி  இவற்றின்  கூட்டணிதான் ‘ஏபிஸி’ பானம்.  இந்தக் காய்+கனி கூட்டணி நமக்குத் தரக்கூடிய நன்மைகள், அளவில்லாதவை. இவை சும்மா தேர்தல் வாக்குறுதிபோல் காற்றில் கரைந்து போவதல்ல. தான் சக்கையாகிப் போனாலும், ‘உங்கள் உடலுக்கு நாங்க கியாரண்டியாக்கும்’ என வாக்குறுதி கொடுக்கிறது ‘ஏபிஸி’ ட்ரிங்க்.

‘மிராக்கிள் ட்ரிங்க்’ என போற்றப்படும் அதிசய ‘ஏபிஸி’ பானம் சீன மூலிகை மருத்துவர்களால் பரிந்துரைக்கப் பட்டது. இந்தப் பானத்தினால் கேன்ஸர் தீவிரத்தை வெகுவாகக் குறைக்கலாம், குணமாக்கலாம் என ஆரம்பித்து இன்று பல்வேறு நோய்களுக்குக் கண்கண்ட மருந்தாக விளங்குகிறது.

இந்தப் பானம் செய்வது எப்படி? ஆப்பிள், கேரட், பீட்ரூட் தலா ஒன்று எடுத்து நன்றாகக் கழுவி, தோலுடன் மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டி குடிக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்துக் குடிக்கக்கூடாது. வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் குடிக்கலாம். ஃப்ரெஷ்ஷாகக் குடித்தால் பவரோ பவர்.

இந்த இரண்டு காய் + ஒரு கனியின் பானத்தில் உயிர் காக்கும் ‘ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்கள்’ நிரம்பியிருக் கின்றன. நார்ச்சத்து மிக்க ஆப்பிளில் வைட்டமின் ஏ,பி1,பி2,பி6, ஸிங்க், காப்பர், நியாஸின், பொட்டாஷியம், பாஸ்பரஸ்... அப்பப்பா ஏராள நன்மைகள். பீட்டா கரோட்டின் கொண்ட கேரட்டில் மினரல்களும் ஏகமாக உள்ளன. பீட்ரூட்டில் வைட்டமின்களுடன் இரும்புச்சத்து, பொட்டாஷியம்... என எல்லா நன்மைகளும் உள்ளன. பீட்ரூட் சாப்பிட்டால் முதுமை வராது. ‘ஆண்டி ஏஜிங்’ பிராப்பர்டீஸ் உள்ளன. (உங்களை யாருமே ஆனட்டின்னு கூப்பிட மாட்டாங்க)

தினமும் காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு முன்னால் ‘ஏபிஸி’ பருகினால் என்னென்ன நன்மைகள் பார்ப்போமா...

* புற்றுநோயால் அவதிப்படுபவர்கள் தினமும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பருகினால் நோயின் தாக்குதலிலிருந்து விடுபட்டு விடலாமாம்.

* சிறுநீரகம், கணையம், கிட்னி  மட்டுமல்லாது இதயத்தையும் வலுப்பெறச் செய்யும். இரத்த விருத்தி, சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமம் டாலடிக் கும். முகப்பரு வரவே வராது.

*ஜீரண சக்தி அதிகரிக்கும். அல்ஸர் பிரச்னைக்குத் தீர்வு. மலச்சிக்கலுக்கும் டாட்டா.

*மூளையைக் கசக்காமலே ஐடியா கூடைக் கூடையாய் வந்து கொட்டும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*பெண்களுக்கு மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம். வெயிட் லூஸ் ஆகி, ஒல்லி பெல்லியாக விரும்புபவர்கள் குடிக்க வேண்டிய பானம். நம்மை நாள் முழுக்க எனர்ஜெடிக்காக இருக்க உதவும். கலோரிகள் மிகக் குறைவானது.

*கணினிக்கு எதிரே மணிக்கணக்காக வேலை செய்து, கண்கள் சோர்ந்து, சிவந்த விழிகளுடன், கண்ணில் ஈரப்பசை குறைந்து... என ஏகப் பிரச்னைகளுடன் இருந்தால் அதற்கு ஒரே தீர்வு ‘ஏபிஸி’ பானம் தான்! கண்பார்வை நலம் பெறும்.

* ‘ஏபிஸி’ பானத்தினால் நன்மை பட்டியல் நீண்டு கொண்டே போகும். தொடந்து மூன்று மாதம் தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி (இதை பருகியவுடன் ஒரு மணி நேரத்திற்கு வேறெதுவும் சாப்பிடக் கூடாது) வந்தால் ஆரோக்கியம் கூடும். அதிக காசு பணம் செலவில்லை. பக்க விளைவுகள் கிடையாது.                                            .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com