வாங்க வீட்டில் பூந்தோட்டம் அமைக்கலாம்!

வாங்க வீட்டில் பூந்தோட்டம் அமைக்கலாம்!

வீட்டைச் சுற்றிப் பூச்செடிகளும் கனி தரும் மரங்களும் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுவது உண்டு. வீட்டுத் தோட்டம் இருந்தால் அதுவே ஒரு பொழுதுபோக்காக இருக்கும். வீட்டுத் தோட்டம் போடும் பெண்கள் கீழ்க்கண்டவற்றில் கவனமாக இருந்தால் அது அவர்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்.

பூச்செடிகளைத் தரையில் வளர்க்க ஆசைப்படாமல் ஆழகிய தொட்டிகளில் வைத்து வளர்ப்பது நல்லது. செடிகளை பதியம் போடுவதென்றால் தொட்டியில் வைத்துப் பதியம் போடும்போது சிரமமிருக்காது. வீட்டில் ஏதாவது பார்ட்டி அல்லது விசேஷ காலங்கள் என்றால் தொட்டியை எளிதாகத் தூக்கி வந்து வீட்டை அலங்கரிக்கலாம். பின்பு, தொட்டியைப் பத்திரமாகத் தோட்டத் தில்கொண்டு வைத்து விடலாம்.

பூச்செடிகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. வாசனை மிகுந்த மலர்ச் செடிகளாக இருப்பது நல்லது. இவை தலை யில் சூடிக்கொள்ளவும், பூஜைக்கும் உபயோக இருக்கும்.

பூச்செடிகளைத் தொட்டியில் வைத்து வளர்ப்பதால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். நிலத்தில் இருந்தால் நிலம் அதிக தண்ணீரை உறிஞ்சும். தொட்டி என்பதால் நாமே அளவாகத் தண்ணீரை ரப்பர் குழாய்களின் மூலம் பாய்ச்சலாம்.

தொட்டிகளை ஒரே வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். பூக்கள் பல நிறமானவை. ஒரு நிறம் கொண்ட பூச்செடி தொட்டிகளை ஒரு வரிசையிலும், வேறு நிறம் கொண்ட பூச்செடித் தொட்டிகளை வேறு ஒரு வரிசையிலும் வைத்து அழகுபடுத்தலாம். உதாரணத்திற்கு மல்லிகைப்பூ, பிச்சிப்பூ. இருவாட்சி, இவை வெள்ளை நிறம் கொண்டவை. இவைகளை ஒரு வரிசையிலும், கனகாம்பரம், சிவப்பு ரோஜா, நந்தியாவட்டை, சிவப்பரளி இவை சிவந்த நிறம் கொண்டவை. இவைகளை ஒரு வரிசையில் வைத்தால் பார்ப்பதற்கு நன்றாக எடுப்பாக இருக்கும்.

பூக்களை தினசரி பறிப்பது முக்கியம். மொட்டுகளை விட்டுவிட்டு மலர்ந்த பூ பூக்களைப் பறித்தால்தான் புதிய மொட்டுக்கள் பூக்கவும், மொட்டுக்கள் மலராய் விரியவும் இயற்கை இடம் கொடுக்கும். அழகிற்காக தோட்டத்தைப் போட்டுவிட்டுப் பூக்களைப் பறிக்காமல் இருக்கக் கூடாது!

னி தரும் மரங்களை வீட்டைச் சுற்றி வளர்ப்பது சுகாதார முறையிலும் நல்லது. சில பழம் தரும் மரங்கள் நிழலும் தரக் கூடியவை. கோடைக்காலத்தில் காற்று இம் மரங்களைத் தாக்கி அம்மரக் கிளைகள் அசைந்து நம் வீட்டுக்குள் காற்றை அனுப்பும். சுகாதாரமான இயற்கைக் காற்று மரங்களால் நமக்குக் கிடைக்கின்றன.

வேர்கள் அதிகமாக நிலத்தில் ஊடுருவாத மரங்களை வீட்டின் அருகிலும், வேர் பரப்பு கொண்ட மரங்களை வீட்டின் காம்பவுண்ட் பக்கத்திலும் வளர விடுவது நல்லது. சில மரங்களின் வேர்கள் பூமிக்கடியில் ஊடுருவிப் பாய்வதால் வீட்டு அஸ்திவாரம் பாதிக்கப்படலாம். எனவே அது போன்ற மரங்களை வீட்டுக் கட்டிடத்தை ஒட்டி வைக்கக் கூடாது.

ரங்களிலிருந்து உதிரும் இலைகள் குப்பைகளாக சேர வாய்ப்புள்ளது. எனவே உடனுக்குடன் உதிரும் இலைகளை அகற்ற வேண்டும் இந்த இலைகளை வீட்டின் பின்புறத்தில் சேர்த்து வைத்து மக்க வைத்தால் அது உரச் சத்தாக வர வாய்ப்புண்டு. மரங்களுக்கு இயற்கை உரமான தழைகள், சாணம் போன்றவற்றை வைப்பதும் நல்லது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com