Dr. சித்ரா மாதவன்.பகுதி – 6.குடும்ப சமேத ஸ்ரீ கோதண்டராமர்!.சென்னை புறநகர், வண்டலுரிலிருந்து செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில், ஊனமாஞ்சேரி எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில். இத்தலம் அக்காலத்தில் அச்யுதேந்திர மகாராயபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும், செங்களுனிப்பட்டு என்றும் மற்றொரு பெயரால் அழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயரே மருவி தற்காலத்தில் செங்கல்பட்டு ஆனதாக செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. தவிர, இந்த சேப்பேட்டின் மூலம் இத்தலம் பதினாறாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற ஓர் வழிபாட்டுத் தலமாக விளங்கியுள்ளது என்பதையும் அறிய முடிகிறது..கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கருவறையில்ஸ்ரீராமபிரான் வில், அம்பு தாங்கிய கோலத்தில் விளங்க வலப்பக்கம் சீதா தேவியும் இடப்பக்கம் லட்சுமணன், பரதன், சத்ருகனன் மற்றும் அனுமன் ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். கருவறை மூலவரைப் போன்றே உத்ஸவ மூர்த்தியும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆலயத்தில் குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகளின் வெண்கல சிலைகளும் வழிபாட்டில் உள்ளன. முன் மண்டபத்தில் விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகர் ஆகியோருக்கு கற்சிலைகள் உள்ளன..ஆலயத்திற்கும் வெளியில் உள்ள கருடர் சன்னிதிக்கும் நடுவில் ஓர் நான்கு கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் வானிலை காரணமாக சேதமடைந்துள்ளன. கோயிலின் வாயிலில் கல்லால் ஆன தீபஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதன் நான்கு புறங்களிலும் அனுமன், கருடன் மற்றும் வைணவக் குறியீடுகளான சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன..கருவறையின் மேலுள்ள ஆனந்த விமானத்தின் நான்கு புறங்களிலும் அழகிய சுதையால் ஆன பூவராகர், யோக நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் கருடன் ஆகியோருடன் காட்சியளிக்கும் வைகுண்டநாதர் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன..ஆலயத்தின் வெளி மற்றும் உள் சுவற்றில் விஜயநகர மன்னர்களின் சின்னமான வராகம் காணப்படுகிறது. அதனுடன் வாள், சந்திரன் மற்றும் சூரியன் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த ஆலயம் பதினாறாம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இந்தக் கோயிலை எழுப்ப விஜயநகர மன்னர்களின் ஆதரவு கிடைத்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. கோயிலின் அருகிலேயே தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கும் தல தீர்த்தம் அமைந்துள்ளது..வைகானச ஆகமம் கடைபிடிக்கப்படும் இந்தக் கோயிலில் சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர, சித்திரை முதல் நாள் மற்றும் பொங்கல் பண்டிகை ஆகியவையும் இக்கோயிலில் மிகவும் விசேஷம். மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீராமபிரானுக்கு திருப்பாத ஸேவை உண்டு..சிறப்பு கல்வெட்டுகள்: விஜயநகர மன்னன் அச்யுதராயன் (1530 – 1542 CE) காலத்து சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட செப்பேடு ஒன்று இக்கிராமத்தைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை அளிக்கிறது. அச்யுதராய மன்னன் கிருஷ்ணதேவராயரின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் சாராம்சம் என்னவென்றால், 'மகாராஜன் அச்யுதராயன், ஹம்பியில் (விஜயநகர அரசின் தலைநகர்) வீற்றிருக்கும் விட்டலனின் முன்பு, இந்த உகினை (ஊனமாஞ்சேரி) கிராமத்தை வேத சாஸ்திரங்களில் சிறந்த வல்லுனர்களுக்கு தானமாகக் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த கிராமத்திலிருந்து ஈட்டும் வருமானமானது 60 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒண்ணேகால் பங்குஶ்ரீ ரகுநாதருக்கு ஒதுக்கப்பட வேண்டும்" என்பதாகும். இந்த ஆலயத்தின் ஸ்வாமி அக்காலத்தில், 'ரகுநாதன்' என்ற பெயரால் அறியப்பட்டிருக்கிறார்..விஜயநகர மன்னர்களின் தலைநகரான ஹம்பிதான் ராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தை பகுதியாகும். அப்படியிருக்க, விஜயநகர மன்னர்கள் வைணவர்களாகவும், ராம பக்தர்களாகவும் இருந்ததில் வியப்பில்லை. இருந்தும், ஹம்பியில் ஆளும் மன்னர்கள் ஊனமாஞ்சேரி போன்ற சிறு ஊர்களில் கோயில் அமைத்து, அதன் பராமரிப்புக்கு நிவந்தங்கள் அளித்து, கோயிலைச் சுற்றி பல தொழில்களுக்கும் வழி வகுத்துள்ளனர். பராமரிப்பின்றி இருந்த இந்தக் கோயிலை பக்தகோடிகள் தற்போது முன்னெடுத்துப் புதுப்பித்து தொடர் வழிபாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். நீங்கள் இக்கட்டுரையில் காண்பது கோயிலின் பழைய புகைப்படமும், தற்போது புதுப்பித்த பிறகு காட்சி தரும் புதிய படங்களுமாகும். இப்படி நமது நாட்டில் பல புராதன கோயில்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கிடப்பது வருந்தத்தக்கது. அவற்றை மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வருவது இந்துக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..இந்தக் கோயிலில் காலையில் ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. கோயிலுக்குச் செல்ல விரும்புவோர் காலை 7.30 மணிக்கு அங்கு இருப்பது போல ஏற்பாடு செய்து கொள்வது நலம்!.(நிறைந்தது)
Dr. சித்ரா மாதவன்.பகுதி – 6.குடும்ப சமேத ஸ்ரீ கோதண்டராமர்!.சென்னை புறநகர், வண்டலுரிலிருந்து செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில், ஊனமாஞ்சேரி எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில். இத்தலம் அக்காலத்தில் அச்யுதேந்திர மகாராயபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும், செங்களுனிப்பட்டு என்றும் மற்றொரு பெயரால் அழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயரே மருவி தற்காலத்தில் செங்கல்பட்டு ஆனதாக செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. தவிர, இந்த சேப்பேட்டின் மூலம் இத்தலம் பதினாறாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற ஓர் வழிபாட்டுத் தலமாக விளங்கியுள்ளது என்பதையும் அறிய முடிகிறது..கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கருவறையில்ஸ்ரீராமபிரான் வில், அம்பு தாங்கிய கோலத்தில் விளங்க வலப்பக்கம் சீதா தேவியும் இடப்பக்கம் லட்சுமணன், பரதன், சத்ருகனன் மற்றும் அனுமன் ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். கருவறை மூலவரைப் போன்றே உத்ஸவ மூர்த்தியும் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆலயத்தில் குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகளின் வெண்கல சிலைகளும் வழிபாட்டில் உள்ளன. முன் மண்டபத்தில் விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகர் ஆகியோருக்கு கற்சிலைகள் உள்ளன..ஆலயத்திற்கும் வெளியில் உள்ள கருடர் சன்னிதிக்கும் நடுவில் ஓர் நான்கு கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் வானிலை காரணமாக சேதமடைந்துள்ளன. கோயிலின் வாயிலில் கல்லால் ஆன தீபஸ்தம்பம் ஒன்று உள்ளது. அதன் நான்கு புறங்களிலும் அனுமன், கருடன் மற்றும் வைணவக் குறியீடுகளான சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன..கருவறையின் மேலுள்ள ஆனந்த விமானத்தின் நான்கு புறங்களிலும் அழகிய சுதையால் ஆன பூவராகர், யோக நரசிம்மர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் கருடன் ஆகியோருடன் காட்சியளிக்கும் வைகுண்டநாதர் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன..ஆலயத்தின் வெளி மற்றும் உள் சுவற்றில் விஜயநகர மன்னர்களின் சின்னமான வராகம் காணப்படுகிறது. அதனுடன் வாள், சந்திரன் மற்றும் சூரியன் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த ஆலயம் பதினாறாம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இந்தக் கோயிலை எழுப்ப விஜயநகர மன்னர்களின் ஆதரவு கிடைத்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. கோயிலின் அருகிலேயே தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கும் தல தீர்த்தம் அமைந்துள்ளது..வைகானச ஆகமம் கடைபிடிக்கப்படும் இந்தக் கோயிலில் சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர, சித்திரை முதல் நாள் மற்றும் பொங்கல் பண்டிகை ஆகியவையும் இக்கோயிலில் மிகவும் விசேஷம். மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீராமபிரானுக்கு திருப்பாத ஸேவை உண்டு..சிறப்பு கல்வெட்டுகள்: விஜயநகர மன்னன் அச்யுதராயன் (1530 – 1542 CE) காலத்து சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட செப்பேடு ஒன்று இக்கிராமத்தைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை அளிக்கிறது. அச்யுதராய மன்னன் கிருஷ்ணதேவராயரின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் சாராம்சம் என்னவென்றால், 'மகாராஜன் அச்யுதராயன், ஹம்பியில் (விஜயநகர அரசின் தலைநகர்) வீற்றிருக்கும் விட்டலனின் முன்பு, இந்த உகினை (ஊனமாஞ்சேரி) கிராமத்தை வேத சாஸ்திரங்களில் சிறந்த வல்லுனர்களுக்கு தானமாகக் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த கிராமத்திலிருந்து ஈட்டும் வருமானமானது 60 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒண்ணேகால் பங்குஶ்ரீ ரகுநாதருக்கு ஒதுக்கப்பட வேண்டும்" என்பதாகும். இந்த ஆலயத்தின் ஸ்வாமி அக்காலத்தில், 'ரகுநாதன்' என்ற பெயரால் அறியப்பட்டிருக்கிறார்..விஜயநகர மன்னர்களின் தலைநகரான ஹம்பிதான் ராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தை பகுதியாகும். அப்படியிருக்க, விஜயநகர மன்னர்கள் வைணவர்களாகவும், ராம பக்தர்களாகவும் இருந்ததில் வியப்பில்லை. இருந்தும், ஹம்பியில் ஆளும் மன்னர்கள் ஊனமாஞ்சேரி போன்ற சிறு ஊர்களில் கோயில் அமைத்து, அதன் பராமரிப்புக்கு நிவந்தங்கள் அளித்து, கோயிலைச் சுற்றி பல தொழில்களுக்கும் வழி வகுத்துள்ளனர். பராமரிப்பின்றி இருந்த இந்தக் கோயிலை பக்தகோடிகள் தற்போது முன்னெடுத்துப் புதுப்பித்து தொடர் வழிபாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். நீங்கள் இக்கட்டுரையில் காண்பது கோயிலின் பழைய புகைப்படமும், தற்போது புதுப்பித்த பிறகு காட்சி தரும் புதிய படங்களுமாகும். இப்படி நமது நாட்டில் பல புராதன கோயில்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கிடப்பது வருந்தத்தக்கது. அவற்றை மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வருவது இந்துக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..இந்தக் கோயிலில் காலையில் ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. கோயிலுக்குச் செல்ல விரும்புவோர் காலை 7.30 மணிக்கு அங்கு இருப்பது போல ஏற்பாடு செய்து கொள்வது நலம்!.(நிறைந்தது)