– கே.நிருபமா.அக்ஷதை என்றால் உடையாத முழு அரிசி என்று பொருள். எல்லா பூஜைகளிலும் அட்சதை முக்கியம். அதேபோல், பல கோயில்களிலும், முக்கியமாக ஸ்ரீராகவேந்திரர் மடங்களில் அட்சதை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நம் வீடுகளிலும் திருமணம், பூணூல் போன்ற சடங்குகளில் அட்சதை தூவி வாழ்த்துவது மரபு..மந்த்ராலயத்தில் கொடுக்கப்படும் மந்த்ராட்சதைக்கு பக்தர்களிடையே விசேஷமான ஸ்தானம் உண்டு. குரு ஸ்ரீராகவேந்திரரின் திருக்கரங்களால் அளிக்கப்பட்ட மந்த்ராக்ஷதைக்கு வாழ்க்கையையே மாற்றி வளமாக்கும் சக்தி உண்டு. இதை விளக்கும் ஒரு சம்பவம்..அதவானி (ஆதோனி)யின் பக்கத்தில் உள்ள கிராமம் கந்தனாலை. வெங்கண்ணன் அங்கு வசித்த ஒரு இளைஞன். பரம ஏழை; படிப்பறிவில்லாதவன். ஆனால், அவனுக்கு ஸ்ரீராகவேந்திரரிடம் மாறாத பக்தி! ஒரு நாள் ஸ்வாமிகள் நடந்து போய்க் கொண்டிருக்கையில் அவரை வணங்கி அருள்புரியுமாறு வேண்டினான். அவரும் தயை கூர்ந்து அவனுக்கு மந்த்ராக்ஷதை வழங்கி, "உனக்குக் கஷ்டம் வரும்போது என்னை நினை! நான் உன்னை ரக்ஷிப்பேன்!" என்றார். வெங்கண்ணன் ஆனந்தமடைந்தான்..வழக்கம்போல், ஒரு நாள் அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அந்த ஊர் நவாப் சித்தி மசூதிகான் பரிவாரங்களுடன் எதிர்ப்பட்டான். பரிவாரம் வெங்கண்ணன் அருகில் வரவும், இரு சேவகர்கள் நவாபிற்கு இரண்டு கடிதங்கள் கொண்டுவந்து கொடுக்கவும் சரியாக இருந்தது..நவாபிற்கு அட்சர ஞானம் இருக்கவில்லை. அருகில் யாரும் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லை! நவாபிற்கோ கடிதத்தில் உள்ள செய்தியை அறிந்துகொள்ளும் ஆர்வம்! சுற்றுமுற்றும் பார்த்தவனின் பார்வை வெங்கண்ணனின் மேல் பட்டது. உடனே சமிக்ஞை செய்து அவனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னான்..வெங்கண்ணன், 'தனக்குப் படிக்கத் தெரியாது' என்று சொன்னதை நம்பாமல் நவாப் கோபப்பட்டான். "படிக்கத் தெரியாதென்று பொய் சொல்கிறாயா? இதற்கு நீ தண்டிக்கப்படுவாய்!" என்று மிரட்டினான்..சட்டென்று வெங்கண்ணனுக்கு மந்த்ராக்ஷதை நினைவிற்கு வந்தது. அவன் அதைக் கையால் தொட்டுக்கொண்டு, ஸ்ரீ குருராயரை ஸ்மரணை செய்தான். 'தனக்குப் படிக்கும் சக்தி அருளும்படி' மனமுருகிப் பிரார்த்தித்தான். கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்!.ஒரு கடிதத்தில் நவாபின் சைனியம் போரில் வெற்றியடைந்த செய்தி இருந்தது! இன்னொன்றில் நவாபிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தி! இரண்டையும் கேட்டு நவாப் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டான்!.வெங்கண்ணனை அழைத்துப் போய் அவனுக்குத் திவான் பதவி அளித்துத் தன் பத்திர விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தான்! வெங்கண்ணனும் ஸ்ரீகுரு ராகவேந்திரரின் அருளால் எல்லா வேலைகளையும் திறம்பட நடத்தினான்..ஸ்ரீராகவேந்திரரிடம் மாறாத பக்தியுடன் வாழ்ந்தான். பிற்பாடு மந்த்ராலய கிராமத்தை ஸ்ரீராகவேந்திரருக்குத் தானமாகக் கொடுக்கும்படி நவாபிடம் விண்ணப்பித்து, அதில் வெற்றியடைந்தான். அந்த மாஞ்சாலி என்ற மந்த்ராலயத்திலேயே ஸ்ரீராகவேந்திரர் நிலைத்து ஜீவன்முக்தராக இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்..பெருமை வாய்ந்த மந்த்ராலய மந்த்ராக்ஷதையில் ஸ்ரீராகவேந்திரர் திருக்கரத்தால் ஸ்பரிசிக்கப்பட்ட, 'ஒரிஜினல்' மந்த்ராக்ஷதையின் அம்சம் இன்றளவும் இருப்பது விசேஷம். அது எப்படியென்றால், தினமும் மூலவர்ஸ்ரீ ராமருக்கு சமர்ப்பிக்கும் மந்த்ராக்ஷதையை ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்திற்குச் சமர்ப்பிக்கின்றனர். பீடத்தில் அமரும் ஸ்வாமிகள் கொடுக்கும் அக்ஷதையும் வேத மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டே விநியோகிக்கப்படுகிறது..மந்த்ராக்ஷதை வைத்திருக்கும் பாத்திரம் அக்ஷய பாத்திரம் எனப்படும். இது ஸ்ரீராகவேந்திரரின் காலம்தொட்டே இருந்த பாத்திரம் என்கின்றனர். கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அளித்தும் இந்தப் பாத்திரத்தைக் காலி செய்ததே இல்லை! கொஞ்சம் இருக்கும்போதே மறுபடியும் புது மந்த்ராக்ஷதையைக் கலந்து விடுகின்றனர். அதனால் ஸ்ரீராயர் திருக்கரம் பட்ட மந்த்ராக்ஷதையின் அம்சம் இன்றளவும் அதில் உள்ளது எனலாம். இந்தப் பாத்திரத்தைக் கழுவதும் இல்லை!.பிற்பாடு வந்த பீடாதிபதிகளின் அருளாசியும் கலந்து இந்த மந்த்ராக்ஷதையின் மகிமை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்ரீராகவேந்திரர் ஆராதனை சமயத்தில் ஐம்பது குவிண்டாலுக்கும் அதிக மந்ந்ராக்ஷதை விநியோகிக்கப்படுவது இதன் மகிமையை விளக்குகிறது. இந்தப் புத்தாண்டில் ஸ்ரீராகவேந்திரர் கிருபையால் அனைவருக்கும் சகல நன்மைகளும் உண்டாகட்டும்!
– கே.நிருபமா.அக்ஷதை என்றால் உடையாத முழு அரிசி என்று பொருள். எல்லா பூஜைகளிலும் அட்சதை முக்கியம். அதேபோல், பல கோயில்களிலும், முக்கியமாக ஸ்ரீராகவேந்திரர் மடங்களில் அட்சதை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நம் வீடுகளிலும் திருமணம், பூணூல் போன்ற சடங்குகளில் அட்சதை தூவி வாழ்த்துவது மரபு..மந்த்ராலயத்தில் கொடுக்கப்படும் மந்த்ராட்சதைக்கு பக்தர்களிடையே விசேஷமான ஸ்தானம் உண்டு. குரு ஸ்ரீராகவேந்திரரின் திருக்கரங்களால் அளிக்கப்பட்ட மந்த்ராக்ஷதைக்கு வாழ்க்கையையே மாற்றி வளமாக்கும் சக்தி உண்டு. இதை விளக்கும் ஒரு சம்பவம்..அதவானி (ஆதோனி)யின் பக்கத்தில் உள்ள கிராமம் கந்தனாலை. வெங்கண்ணன் அங்கு வசித்த ஒரு இளைஞன். பரம ஏழை; படிப்பறிவில்லாதவன். ஆனால், அவனுக்கு ஸ்ரீராகவேந்திரரிடம் மாறாத பக்தி! ஒரு நாள் ஸ்வாமிகள் நடந்து போய்க் கொண்டிருக்கையில் அவரை வணங்கி அருள்புரியுமாறு வேண்டினான். அவரும் தயை கூர்ந்து அவனுக்கு மந்த்ராக்ஷதை வழங்கி, "உனக்குக் கஷ்டம் வரும்போது என்னை நினை! நான் உன்னை ரக்ஷிப்பேன்!" என்றார். வெங்கண்ணன் ஆனந்தமடைந்தான்..வழக்கம்போல், ஒரு நாள் அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அந்த ஊர் நவாப் சித்தி மசூதிகான் பரிவாரங்களுடன் எதிர்ப்பட்டான். பரிவாரம் வெங்கண்ணன் அருகில் வரவும், இரு சேவகர்கள் நவாபிற்கு இரண்டு கடிதங்கள் கொண்டுவந்து கொடுக்கவும் சரியாக இருந்தது..நவாபிற்கு அட்சர ஞானம் இருக்கவில்லை. அருகில் யாரும் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லை! நவாபிற்கோ கடிதத்தில் உள்ள செய்தியை அறிந்துகொள்ளும் ஆர்வம்! சுற்றுமுற்றும் பார்த்தவனின் பார்வை வெங்கண்ணனின் மேல் பட்டது. உடனே சமிக்ஞை செய்து அவனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னான்..வெங்கண்ணன், 'தனக்குப் படிக்கத் தெரியாது' என்று சொன்னதை நம்பாமல் நவாப் கோபப்பட்டான். "படிக்கத் தெரியாதென்று பொய் சொல்கிறாயா? இதற்கு நீ தண்டிக்கப்படுவாய்!" என்று மிரட்டினான்..சட்டென்று வெங்கண்ணனுக்கு மந்த்ராக்ஷதை நினைவிற்கு வந்தது. அவன் அதைக் கையால் தொட்டுக்கொண்டு, ஸ்ரீ குருராயரை ஸ்மரணை செய்தான். 'தனக்குப் படிக்கும் சக்தி அருளும்படி' மனமுருகிப் பிரார்த்தித்தான். கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான்!.ஒரு கடிதத்தில் நவாபின் சைனியம் போரில் வெற்றியடைந்த செய்தி இருந்தது! இன்னொன்றில் நவாபிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தி! இரண்டையும் கேட்டு நவாப் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டான்!.வெங்கண்ணனை அழைத்துப் போய் அவனுக்குத் திவான் பதவி அளித்துத் தன் பத்திர விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தான்! வெங்கண்ணனும் ஸ்ரீகுரு ராகவேந்திரரின் அருளால் எல்லா வேலைகளையும் திறம்பட நடத்தினான்..ஸ்ரீராகவேந்திரரிடம் மாறாத பக்தியுடன் வாழ்ந்தான். பிற்பாடு மந்த்ராலய கிராமத்தை ஸ்ரீராகவேந்திரருக்குத் தானமாகக் கொடுக்கும்படி நவாபிடம் விண்ணப்பித்து, அதில் வெற்றியடைந்தான். அந்த மாஞ்சாலி என்ற மந்த்ராலயத்திலேயே ஸ்ரீராகவேந்திரர் நிலைத்து ஜீவன்முக்தராக இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்..பெருமை வாய்ந்த மந்த்ராலய மந்த்ராக்ஷதையில் ஸ்ரீராகவேந்திரர் திருக்கரத்தால் ஸ்பரிசிக்கப்பட்ட, 'ஒரிஜினல்' மந்த்ராக்ஷதையின் அம்சம் இன்றளவும் இருப்பது விசேஷம். அது எப்படியென்றால், தினமும் மூலவர்ஸ்ரீ ராமருக்கு சமர்ப்பிக்கும் மந்த்ராக்ஷதையை ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்திற்குச் சமர்ப்பிக்கின்றனர். பீடத்தில் அமரும் ஸ்வாமிகள் கொடுக்கும் அக்ஷதையும் வேத மந்திரங்களால் புனிதமாக்கப்பட்டே விநியோகிக்கப்படுகிறது..மந்த்ராக்ஷதை வைத்திருக்கும் பாத்திரம் அக்ஷய பாத்திரம் எனப்படும். இது ஸ்ரீராகவேந்திரரின் காலம்தொட்டே இருந்த பாத்திரம் என்கின்றனர். கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அளித்தும் இந்தப் பாத்திரத்தைக் காலி செய்ததே இல்லை! கொஞ்சம் இருக்கும்போதே மறுபடியும் புது மந்த்ராக்ஷதையைக் கலந்து விடுகின்றனர். அதனால் ஸ்ரீராயர் திருக்கரம் பட்ட மந்த்ராக்ஷதையின் அம்சம் இன்றளவும் அதில் உள்ளது எனலாம். இந்தப் பாத்திரத்தைக் கழுவதும் இல்லை!.பிற்பாடு வந்த பீடாதிபதிகளின் அருளாசியும் கலந்து இந்த மந்த்ராக்ஷதையின் மகிமை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்ரீராகவேந்திரர் ஆராதனை சமயத்தில் ஐம்பது குவிண்டாலுக்கும் அதிக மந்ந்ராக்ஷதை விநியோகிக்கப்படுவது இதன் மகிமையை விளக்குகிறது. இந்தப் புத்தாண்டில் ஸ்ரீராகவேந்திரர் கிருபையால் அனைவருக்கும் சகல நன்மைகளும் உண்டாகட்டும்!