பகுதி – 3.-நளினி சம்பத்குமார்.ஓவியம்; வேதா.பக்குவப்படாத பானை!.நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல விதமான பாவங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் செய்யும் அத்தனை பாவங்களுக்கும் ஒரே விமோசனம், நமது குருவின் திருவடியை தேடி அத்திருவடியில் நம்மை நாமே ஒப்படைப்பது மட்டும்தான். 'இது வரை எத்தனையோ தவறுகள் செய்து விட்டேன். செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து இனி மேலும் நான் எந்த தவறும் செய்யாமல் என்னை காக்க வேண்டும். தங்கள் பாதங்களே எளியேனை பாதுகாக்க வேண்டும்' என்று நாம் குருவின் திருவடியில் நம்மை நாமே சமர்பிக்கும் ஒரு தருணம்தான் வாழ்க்கையில் பல ஏற்றங்கள் நம்மை தேடி வரும் சந்தர்ப்பமாக அமையும்..ஒரு குருவின் திருவடியை நாம் நாடாதவறை நம்மை பக்குவப்படாத பானையாக தான் பார்க்கிறார், பாவிக்கிறார் பகவான். இதை அவரே சொல்லியும் காட்டியிருக்கிறார் நாம தேவரிடம். நாம தேவர் ஐந்து வயது சிறுவனாக இருந்த போது பாண்டுரங்க விட்டலனுக்கான நைவேத்யம் இது என தன் தந்தை தன்னிடம் தந்ததை, "விட்டலா இந்தா இது உனக்கானது நீ வந்து சாப்பிடு…" என்று விடாமல் கூப்பிட்டுகொண்டு, பாண்டுரங்க விட்டலன் வராததை பார்த்து விட்டலனின் சிலை மீதே மோதி கொள்ள எத்தனித்தார் நாம தேவர். அப்போது அவரை எதிர்கொண்டு, நாம தேவரின் கையால் தானும் உணவை உண்டு தன் கையால் நாம தேவருக்கும் ஊட்டியவன் அல்லாவா விட்டலன்? அப்படி விட்டலனுக்கும் நாம தேவருக்கும் இடையே ஆன அந்த பக்தி என்பது, நட்பு என்பது பாமாலைகளால் சூட்டப்பட்ட, கட்டப்பட்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. நாம தேவரோடு சரிக்கு சமமாக விளையாட கூடியவன் விட்டலன். விட்டலனின் நாமம் மட்டுமே நாம தேவரின் வாயில் விளையாடி கொண்டே இருக்கும். விட்டலனை விட்டால் நாம தேவருக்கு வேறு யாரையும் தெரியாது..ஒரு ஆஷாட சுக்ல ஏகாதசி அன்று பண்டரிப்புரத்தில், ஞானேஷ்வர், கோரா கும்பர், கபீர் தாசர், முக்தா பாய், ஜனா பாய் என்று எல்லாரும் கூடியிருந்து பாண்டுரங்கனின் அருள் மழையில் குளிர்ந்து கொண்டிருந்த சமயம், கோரா கும்பர் அந்த பாகவதோத்தமர்களை தம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். பானைகள் பல நிரம்பி இருக்கும் கோரா கும்பரின் இல்லத்திற்கு சென்று அங்கும் பாண்டுரங்க விட்டலனின் கீர்த்தனைகளை பாடுவோம் என எல்லாரும் கிளம்பினார்கள். கோரா கும்பரின் வீட்டில் பல விதமான பானைகள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அந்த பானைகளை பார்த்ததும் ஞானேஷ்வரின் தங்கையான சிறுமி முக்தா பாய்க்கு ஒரு கேள்வி எழும்பியது, "ஹே கோரா.. நீங்க ஒரு குயவன்தானே. இங்கே இவ்வளவு பானைகள் இருக்கிறதே… இதில் எதெல்லாம் பக்குவப்பட்ட பானைகள்? எதெல்லாம் பக்குவப்படாத பானைகள்?" என்று கேட்டாள். சிறுமியின் கேள்வியை சிரிப்போடு எதிர்கொண்ட கோரா கும்பர், " ஓ அதுக்கென்னம்மா குழந்த… இப்பவே உனக்கு நான் தட்டி பார்த்து சொல்றேன் இரு" என்று சொல்லியபடியே, பானையை தட்டி பார்க்கும் கட்டையை கொண்டு வந்து முதலில் அந்த கட்டையை கொண்டு கபீர் தாசரின் தலையில் தட்டினார். இது என்ன பக்குவப்பட்ட பானையை பற்றி கேட்டால் இவர் இப்படி பக்தர்களின் தலையில் அடிக்கிறாரே என அங்கே இருப்பவர்கள் நினைத்து கொண்டிருக்க, கட்டை தன் தலையில் பட்டதுமே சட்டென கபீர் தாசர், "ராம் ராம்" என ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்து விட்டார். அடுத்த அடி ஞானேஷ்வரின் தலையில் பட்டது அவர் உடனே, "ஜெய் பாண்டுரங்கா.. ஜெய் ஜெய் பாண்டுரங்கா" என பாட ஆரம்பித்து விட்டார். அடுத்து, கோரா கும்பரின் கண்களுக்கு தட்டுப்பட்டது ஜனாபாய்… ஆதலால், அவர் கட்டையால் தட்ட பட்டதும் ஜனாபாயின் தலை தான், அவள் வாயும் பாண்டுரங்கனைதான் கூப்பிட்டது. அடுத்த முறை முக்தா பாயோடது.. சிறுமி தலையில் கட்டை பட்டதுமே அவளும் சட்டென்று பகவான் நாமாவைதான் கட்டவிழ்த்து விட்டாள். அடுத்தது நாம தேவரின் தலை நோக்கி கட்டையால் அடி விழ, அவரோ, "ஆ …ஆ… அச்சச்சோ என்னது இது? ஏன் இப்படி அடிக்க வேண்டும்? எதுக்காக இப்படி அடிக்க வேண்டும்? என்ன வலி வலிக்கறது தெரியுமா?" என சத்தம் போட்டார் . உடனே கோரா கும்பர், "இந்த ஒரு பானையைத் தவிர இங்க இருக்குற எல்லா பானைகளுமே பக்குவமாகி இருக்கு" என்றார். இந்த பதிலை கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவருமே சிரித்து விட்டனர். நம்மோட வலி இவர்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கா என்று கோபம் கோபமாக வந்தது நாம தேவருக்கு. "என்னை பார்த்தா பக்குவமே இல்லை… பக்குவப்படலன்னு சொல்றீங்க. நல்லா கேட்டுக்கோங்க. என்னோட பாண்டுரங்கன் தினமும் கில்லி விளையாடறான், என் கூடதான் சாப்பிடறான். நான் பாடினா அவன் தாளம் போடறான். நான் ஜமக்காளம் போட்டா எகத்தாளம் பண்ணாம அதுல வந்து என் கூடவே படுத்துக்கறான். அந்த அளவுக்கு பாண்டுரங்க விட்டலனோடு நான் ஐக்கியமாகி இருக்கும்போது என்னோட பக்குவத்தை பத்தி உங்களுக்கு ஐயமே வேண்டாம்" என்று கூற… அங்கிருந்த அனைவரும் அதை கேட்டு கொண்டே இருக்கும்போது சட்டென்று எழுந்த முக்தா பாய், "நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனாலும், நீங்கள் பக்குவப்படவில்லை" என்று பட்டென சொன்னாள். முக்தாவின் வார்த்தை முகத்தில் அடித்தார் போல வந்து விழ விருட்டென அந்த இடத்தை விட்டு எழுந்த நாம தேவர், விட்டலன் சன்னதியை நோக்கி விறு விறுவென நடந்து சென்று அங்கே விட்டலனின் முன் விசும்பி தள்ளி விட்டார். "ஹே நாம தேவா என்னப்பா ஆச்சு உனக்கு. தினம் சந்தோஷமாதானே வருவ… வந்து அபங்கங்களா பாடி தள்ளுவியே? இன்னிக்கு உன் ஆனந்தத்துக்கு என்ன பங்கம் வந்தது..சொல்லுப்பா என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?" என கேட்டான் விட்டலன்.."பாண்டுரங்கா, என்னை பார்த்து, என் தலையில் தட்டி பார்த்து, நான் இன்னும் பக்குவப்படலன்னு அந்த குயவன் கோராகும்பர் சொல்றார். கோரா கும்பர் ஒரு கயவர். அவருக்கு தெரியாது. நமக்குள்ள இருக்குற இந்த சினேகம். நீ சொல்லு நான் பக்குவப்படலியா?" என்று கேட்கிறார் நாம தேவர். நாம தேவரை அன்பாக அணைத்த பாண்டு ரங்கர், "எல்லாம் சரி நாம தேவா. ஆனா நீ பக்குவப்படல.. நீ பக்குவம் படனும்" என்றார். இதை கேட்டதும் தூக்கி வாரி போட்டது நாம தேவருக்கு. "பாண்டு ரங்கா என்ன நீயே இப்படி சொல்லிட்ட?" என்று கேட்க, அதற்கு பாண்டு ரங்கனோ, "குருவில்லாதவன் பக்குவப்படாதவன்தான். கோரா கும்பரின் வாயிலாக, கோரா கும்பரின் வாய் வழியாக உனக்கு அதை சொன்னதே நான்தான்" என்று சொல்லி சிரித்தார் பாண்டு ரங்கன். தெய்வ க்ருபை என்பதே குருவின் க்ருபையால் மட்டுமே கிடைக்க கூடியதன்றோ?" விட்டலா எனக்கு உன்னை விட்டால் யாரும் கிடையாது. அதனால, நீயே எனக்கு குருவாக இரு" என்று நாம தேவர் சொல்ல,' இல்ல நாம தேவா. நான் உனக்கு குருவாய் இருக்க முடியாது" என விட்டலன் சொல்ல, "எனக்கு யார் குரு? என் குருவை எப்படி கண்டு பிடிக்கிறது விட்டலா?" என்ற நாம தேவரின் கேள்விக்கு, "விசோபாதான் உன் குரு" என காட்டி கொடுக்கிறார் பாண்டுரங்க விட்டலன்..பாண்டுரங்க விட்டலன் காட்டி கொடுத்தபடி ஒரு சிவன் கோவிலில் தன் குருவை கண்டுபிடித்து விட்டார் நாம தேவர். பொதுவாக, தெய்வத்தை காட்டி கொடுப்பவர் குருவாகதான் இருப்பார். இங்கே தெய்வமே காட்டி கொடுத்த குரு நாம தேவரின் குருதான். ஒரு குருவால் மட்டுமே நம்மை பக்குவபடுத்த முடியும் என்பதை சொல்லியும் காட்டியும் கொடுத்து விட்டார் பாண்டுரங்கன். பக்குவபடுத்த பட்ட பக்தனாக நாம தேவர் பாண்டுரங்கனோடு ஐக்கியமாகி விட்டார்..பக்குவப்பட்ட பானைகளாக நாமும் மாறுவோம்… குருவின் கிருபை குருவின் திருவடி நம்மை நிச்சயம் பக்குவப்பட்ட பானையாக மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
பகுதி – 3.-நளினி சம்பத்குமார்.ஓவியம்; வேதா.பக்குவப்படாத பானை!.நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பல விதமான பாவங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். நாம் செய்யும் அத்தனை பாவங்களுக்கும் ஒரே விமோசனம், நமது குருவின் திருவடியை தேடி அத்திருவடியில் நம்மை நாமே ஒப்படைப்பது மட்டும்தான். 'இது வரை எத்தனையோ தவறுகள் செய்து விட்டேன். செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து இனி மேலும் நான் எந்த தவறும் செய்யாமல் என்னை காக்க வேண்டும். தங்கள் பாதங்களே எளியேனை பாதுகாக்க வேண்டும்' என்று நாம் குருவின் திருவடியில் நம்மை நாமே சமர்பிக்கும் ஒரு தருணம்தான் வாழ்க்கையில் பல ஏற்றங்கள் நம்மை தேடி வரும் சந்தர்ப்பமாக அமையும்..ஒரு குருவின் திருவடியை நாம் நாடாதவறை நம்மை பக்குவப்படாத பானையாக தான் பார்க்கிறார், பாவிக்கிறார் பகவான். இதை அவரே சொல்லியும் காட்டியிருக்கிறார் நாம தேவரிடம். நாம தேவர் ஐந்து வயது சிறுவனாக இருந்த போது பாண்டுரங்க விட்டலனுக்கான நைவேத்யம் இது என தன் தந்தை தன்னிடம் தந்ததை, "விட்டலா இந்தா இது உனக்கானது நீ வந்து சாப்பிடு…" என்று விடாமல் கூப்பிட்டுகொண்டு, பாண்டுரங்க விட்டலன் வராததை பார்த்து விட்டலனின் சிலை மீதே மோதி கொள்ள எத்தனித்தார் நாம தேவர். அப்போது அவரை எதிர்கொண்டு, நாம தேவரின் கையால் தானும் உணவை உண்டு தன் கையால் நாம தேவருக்கும் ஊட்டியவன் அல்லாவா விட்டலன்? அப்படி விட்டலனுக்கும் நாம தேவருக்கும் இடையே ஆன அந்த பக்தி என்பது, நட்பு என்பது பாமாலைகளால் சூட்டப்பட்ட, கட்டப்பட்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. நாம தேவரோடு சரிக்கு சமமாக விளையாட கூடியவன் விட்டலன். விட்டலனின் நாமம் மட்டுமே நாம தேவரின் வாயில் விளையாடி கொண்டே இருக்கும். விட்டலனை விட்டால் நாம தேவருக்கு வேறு யாரையும் தெரியாது..ஒரு ஆஷாட சுக்ல ஏகாதசி அன்று பண்டரிப்புரத்தில், ஞானேஷ்வர், கோரா கும்பர், கபீர் தாசர், முக்தா பாய், ஜனா பாய் என்று எல்லாரும் கூடியிருந்து பாண்டுரங்கனின் அருள் மழையில் குளிர்ந்து கொண்டிருந்த சமயம், கோரா கும்பர் அந்த பாகவதோத்தமர்களை தம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். பானைகள் பல நிரம்பி இருக்கும் கோரா கும்பரின் இல்லத்திற்கு சென்று அங்கும் பாண்டுரங்க விட்டலனின் கீர்த்தனைகளை பாடுவோம் என எல்லாரும் கிளம்பினார்கள். கோரா கும்பரின் வீட்டில் பல விதமான பானைகள் அடுக்கி வைக்கபட்டிருந்தன. அந்த பானைகளை பார்த்ததும் ஞானேஷ்வரின் தங்கையான சிறுமி முக்தா பாய்க்கு ஒரு கேள்வி எழும்பியது, "ஹே கோரா.. நீங்க ஒரு குயவன்தானே. இங்கே இவ்வளவு பானைகள் இருக்கிறதே… இதில் எதெல்லாம் பக்குவப்பட்ட பானைகள்? எதெல்லாம் பக்குவப்படாத பானைகள்?" என்று கேட்டாள். சிறுமியின் கேள்வியை சிரிப்போடு எதிர்கொண்ட கோரா கும்பர், " ஓ அதுக்கென்னம்மா குழந்த… இப்பவே உனக்கு நான் தட்டி பார்த்து சொல்றேன் இரு" என்று சொல்லியபடியே, பானையை தட்டி பார்க்கும் கட்டையை கொண்டு வந்து முதலில் அந்த கட்டையை கொண்டு கபீர் தாசரின் தலையில் தட்டினார். இது என்ன பக்குவப்பட்ட பானையை பற்றி கேட்டால் இவர் இப்படி பக்தர்களின் தலையில் அடிக்கிறாரே என அங்கே இருப்பவர்கள் நினைத்து கொண்டிருக்க, கட்டை தன் தலையில் பட்டதுமே சட்டென கபீர் தாசர், "ராம் ராம்" என ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்து விட்டார். அடுத்த அடி ஞானேஷ்வரின் தலையில் பட்டது அவர் உடனே, "ஜெய் பாண்டுரங்கா.. ஜெய் ஜெய் பாண்டுரங்கா" என பாட ஆரம்பித்து விட்டார். அடுத்து, கோரா கும்பரின் கண்களுக்கு தட்டுப்பட்டது ஜனாபாய்… ஆதலால், அவர் கட்டையால் தட்ட பட்டதும் ஜனாபாயின் தலை தான், அவள் வாயும் பாண்டுரங்கனைதான் கூப்பிட்டது. அடுத்த முறை முக்தா பாயோடது.. சிறுமி தலையில் கட்டை பட்டதுமே அவளும் சட்டென்று பகவான் நாமாவைதான் கட்டவிழ்த்து விட்டாள். அடுத்தது நாம தேவரின் தலை நோக்கி கட்டையால் அடி விழ, அவரோ, "ஆ …ஆ… அச்சச்சோ என்னது இது? ஏன் இப்படி அடிக்க வேண்டும்? எதுக்காக இப்படி அடிக்க வேண்டும்? என்ன வலி வலிக்கறது தெரியுமா?" என சத்தம் போட்டார் . உடனே கோரா கும்பர், "இந்த ஒரு பானையைத் தவிர இங்க இருக்குற எல்லா பானைகளுமே பக்குவமாகி இருக்கு" என்றார். இந்த பதிலை கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவருமே சிரித்து விட்டனர். நம்மோட வலி இவர்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கா என்று கோபம் கோபமாக வந்தது நாம தேவருக்கு. "என்னை பார்த்தா பக்குவமே இல்லை… பக்குவப்படலன்னு சொல்றீங்க. நல்லா கேட்டுக்கோங்க. என்னோட பாண்டுரங்கன் தினமும் கில்லி விளையாடறான், என் கூடதான் சாப்பிடறான். நான் பாடினா அவன் தாளம் போடறான். நான் ஜமக்காளம் போட்டா எகத்தாளம் பண்ணாம அதுல வந்து என் கூடவே படுத்துக்கறான். அந்த அளவுக்கு பாண்டுரங்க விட்டலனோடு நான் ஐக்கியமாகி இருக்கும்போது என்னோட பக்குவத்தை பத்தி உங்களுக்கு ஐயமே வேண்டாம்" என்று கூற… அங்கிருந்த அனைவரும் அதை கேட்டு கொண்டே இருக்கும்போது சட்டென்று எழுந்த முக்தா பாய், "நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனாலும், நீங்கள் பக்குவப்படவில்லை" என்று பட்டென சொன்னாள். முக்தாவின் வார்த்தை முகத்தில் அடித்தார் போல வந்து விழ விருட்டென அந்த இடத்தை விட்டு எழுந்த நாம தேவர், விட்டலன் சன்னதியை நோக்கி விறு விறுவென நடந்து சென்று அங்கே விட்டலனின் முன் விசும்பி தள்ளி விட்டார். "ஹே நாம தேவா என்னப்பா ஆச்சு உனக்கு. தினம் சந்தோஷமாதானே வருவ… வந்து அபங்கங்களா பாடி தள்ளுவியே? இன்னிக்கு உன் ஆனந்தத்துக்கு என்ன பங்கம் வந்தது..சொல்லுப்பா என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?" என கேட்டான் விட்டலன்.."பாண்டுரங்கா, என்னை பார்த்து, என் தலையில் தட்டி பார்த்து, நான் இன்னும் பக்குவப்படலன்னு அந்த குயவன் கோராகும்பர் சொல்றார். கோரா கும்பர் ஒரு கயவர். அவருக்கு தெரியாது. நமக்குள்ள இருக்குற இந்த சினேகம். நீ சொல்லு நான் பக்குவப்படலியா?" என்று கேட்கிறார் நாம தேவர். நாம தேவரை அன்பாக அணைத்த பாண்டு ரங்கர், "எல்லாம் சரி நாம தேவா. ஆனா நீ பக்குவப்படல.. நீ பக்குவம் படனும்" என்றார். இதை கேட்டதும் தூக்கி வாரி போட்டது நாம தேவருக்கு. "பாண்டு ரங்கா என்ன நீயே இப்படி சொல்லிட்ட?" என்று கேட்க, அதற்கு பாண்டு ரங்கனோ, "குருவில்லாதவன் பக்குவப்படாதவன்தான். கோரா கும்பரின் வாயிலாக, கோரா கும்பரின் வாய் வழியாக உனக்கு அதை சொன்னதே நான்தான்" என்று சொல்லி சிரித்தார் பாண்டு ரங்கன். தெய்வ க்ருபை என்பதே குருவின் க்ருபையால் மட்டுமே கிடைக்க கூடியதன்றோ?" விட்டலா எனக்கு உன்னை விட்டால் யாரும் கிடையாது. அதனால, நீயே எனக்கு குருவாக இரு" என்று நாம தேவர் சொல்ல,' இல்ல நாம தேவா. நான் உனக்கு குருவாய் இருக்க முடியாது" என விட்டலன் சொல்ல, "எனக்கு யார் குரு? என் குருவை எப்படி கண்டு பிடிக்கிறது விட்டலா?" என்ற நாம தேவரின் கேள்விக்கு, "விசோபாதான் உன் குரு" என காட்டி கொடுக்கிறார் பாண்டுரங்க விட்டலன்..பாண்டுரங்க விட்டலன் காட்டி கொடுத்தபடி ஒரு சிவன் கோவிலில் தன் குருவை கண்டுபிடித்து விட்டார் நாம தேவர். பொதுவாக, தெய்வத்தை காட்டி கொடுப்பவர் குருவாகதான் இருப்பார். இங்கே தெய்வமே காட்டி கொடுத்த குரு நாம தேவரின் குருதான். ஒரு குருவால் மட்டுமே நம்மை பக்குவபடுத்த முடியும் என்பதை சொல்லியும் காட்டியும் கொடுத்து விட்டார் பாண்டுரங்கன். பக்குவபடுத்த பட்ட பக்தனாக நாம தேவர் பாண்டுரங்கனோடு ஐக்கியமாகி விட்டார்..பக்குவப்பட்ட பானைகளாக நாமும் மாறுவோம்… குருவின் கிருபை குருவின் திருவடி நம்மை நிச்சயம் பக்குவப்பட்ட பானையாக மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.