கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பதவி
குடியிருப்போர் அனைவருக்கும்
செயலாளர் பதவியின் மேல்
நாட்டம் வந்ததால்
ஆட்டம் கண்டுவிட்டது
அடுக்குமாடி சந்தோஷம்!
…………………………………………….

தேள்


திருடனுக்குத்
தேள் கொட்டவில்லை
ஆனாலும்
கத்துகிறான்
கட்டை விரலை
கதவில்
இடித்துக் கொண்டதால்!
…………………………………………………….

வருத்தம்
ல்ல பலன்கள்
பல தந்தாலும்
ஒதுங்குபவர்களுக்கு
நிழல் தர முடியலியே
வருந்துகிறது
நெடிதுயர்ந்த
பனை மரம்!
– எஸ்.பவானி, திருச்சி
…………………………………………………….

முரண்


டுத்தவர் கையை
எதிர்பார்க்காதே
என்று சொன்னவர்
பார்த்தார் பலருக்கு
கைரேகை ஜோதிடம்!
…………………………………………………….

நன்றி


முற்றிய நெற்கதிர்கள்
தலை குனிந்து
நன்றி சொன்னது
வளர்த்துவிட்ட பூமிக்கு!
– பி.சி.ரகு, விழுப்புரம்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com