தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி!

Gun shoot in south africa
Gun shoot in south africa
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தென்னாப்பிரிக்காவில் ஒரு கிராமத்தில் இரண்டு வெகுஜன துப்பாக்கிச் சூட்டில் 15 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள லுசிகிசிகி என்ற நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன் வீடியோ காட்சிகளை போலீஸார் வெளியிட்டனர்.  நகரின் புறநகரில் உள்ள கிராமப்புற வீட்டுத் தோட்டங்களைக் கொண்ட ஒரே சுற்றுப்புறத்தில் உள்ள இரண்டு வீடுகளில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக செய்திகள் கூறுகின்றன. தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப விழாவின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலிஸார் கூறுகையில், “இந்த கொடூரமான கொலைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய ஒரு வேட்டை தொடங்கப்பட்டுள்ளது." என்று கூறினர்.

ஆனால், இதுகுறித்த உண்மை காரணமும், தாக்குதலுக்கான உள்காரணமும் தெரியவரவில்லை.

உலகளவில் தென்னாப்பிரிக்காவிலேயே அதிகளவு கொலைகள் நடக்கின்றன. குறிப்பாக தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. அதில் பலரும் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர்-அவர்களில் 13 வயது சிறுவன் உட்பட ஏழு பெண்கள்-அண்டை நாடான குவாசலு-நடால் மாகாணத்தில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

தென்னாப்பிரிக்காவின் கொலை விகிதம் 100,000 பேருக்கு 45 ஆக உள்ளது. அமெரிக்காவில் 100,000 பேருக்கு 6.3 ஆக உள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், விகிதம் 100,000க்கு 1 ஆகும்.

இதையும் படியுங்கள்:
News 5 – (30.09.2024) வெயில் கொளுத்தும் நிலையில், மழைக்கு வாய்ப்பு!
Gun shoot in south africa

1 மார்ச் 2023 முதல் 28 பிப்ரவரி 2024 வரையிலான 12 மாதங்களில் நாட்டில் 27,000 கொலைகள் பதிவாகியுள்ளன, இது 62 மில்லியன் மக்கள்தொகையில் ஒவ்வொரு நாளும் 70 க்கும் மேற்பட்ட கொலைகளுக்கு சமமாகும்.

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு பல கடுமையான சட்டங்கள் இருந்தாலும், சட்டவிரோதமாக பயன்படுத்தும் துப்பாக்கிகள் அதிகளவில் கண்டெடுக்கப்படுகின்றன. இதனாலேயே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகளவில் நடத்தப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com