ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படை போர் விமானவிபத்தில் 3 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படை போர் விமானவிபத்தில்  3 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படை போர் விமான விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து விட்டது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த திடீர் விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஹனுமன்கார் பகுதியில் இந்திய விமானப் படையின் எம்ஐஜி 21 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த போர்விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து விட்டது.

அப்போதும் அந்த விமானத்தின் விமானி பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதேநேரத்தில் விமானம் விழுந்த இடத்தில அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் துரதிஷ்ட வசமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com