அலங்கார ஊர்தி மாடல்கள்; மாநிலங்கள்  அனுப்ப  30-ம் தேதி கடைசிநாள்!

models
models

நாட்டின் 2023-ம் ஆண்டுக்கான  குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை அனைத்து மாநில அரசுகளும் இம்மாதம் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 –இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

நாட்டில் வருகிற ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் மாதிரியை மாநிலங்கள் அனைத்தும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.

-இவ்வாறு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வருடம் தமிழகம் சார்பாக அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com