

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : இந்து சமய அறநிலையத் துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 31
பணியிடம் : தமிழ்நாடு
ஆரம்ப தேதி : 25.10.2025
கடைசி தேதி : 25.11.2025
1. பதவி: இளநிலை உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: கூர்க்கா
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
3. பதவி: திருவலகு
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
4. பதவி: கால்நடை பராமரிப்பாளர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
5. பதவி: பெரிய சன்னதி உடல்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. பதவி: பெரிய சன்னதி வீரவண்டி
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7. பதவி: பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. பதவி: தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9. பதவி: உதவி யானைப்பாகன்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்
10. பதவி: சலவையாளர்
சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
11. பதவி: கூட்டுபவர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: இந்த அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை ஆட்டையிடனும், அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.