

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் (மே 29) ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிதித்துறை செயலாளராக லலிதா, இணை செயலாளர்களாக கமல் கிஷோர் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர்க்கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை புதிய கலெக்டராக ஆனந்த் மோகன் நியமனம்.
மக்கள் நல்வாழ்வுத் துறை துணைச் செயலாளராக அழகுமீனா நியமனம்
ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ்-ஐ நியமனம்
தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா ஐ.ஏ.எஸ். நியமனம்
வேளாண் ஒழுங்குமுறை ஆணைய இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பேரூராட்சிகளின் இயக்குநராக பிரியங்கா ஐ.ஏ.எஸ்.-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவு