மத்திய அமைச்சர் எல் முருகன் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மத்திய இரயில்வே துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அதன்படி,
1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)
2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில்
3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில்
4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், 1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்
2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் மோடிக்கும் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸவினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக எல்.முருகன் கூறியுள்ளார்.