

பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவிருந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 19-ந்தேதி மாலை 3.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (வண்டி எண் 06011),
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 21-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06053),
சென்னை சென்டிரலில் இருந்து கோவைக்கு வரும் 19-ந்தேதி இரவு 11.25 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06033),
போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு 21-ந்தேதி இரவு 12.35 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06024),
சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு 21-ந்தேதி மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட இருந்த சிறப்பு ரெயில் (06023) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.