தாமதமாக வந்தவருக்கு ஜாகுவார் கார்… ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் செய்த அந்த செயல்!

Steve Jobs
Steve Jobs
Published on

ஸ்டீவ் ஜாப்ஸ்... ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், ஒரு விஷனரி, அதே சமயம் தனது ஊழியர்களிடம் மிக உயரிய எதிர்பார்ப்புகளைக் கொண்ட ஒரு தலைவர். அவரது தலைமைப் பண்புகள் குறித்து பல கதைகள் உலவினாலும், அவரது அணுகுமுறையில் ஒருவித தனித்துவம் இருப்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது.

1980-களில் ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் செயலாளர் அடிக்கடி அலுவலகத்திற்குத் தாமதமாக வந்திருக்கிறார். வழக்கமாக, தாமதத்திற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் கடும் கண்டிப்புடன் இருப்பார். ஒருநாள், அந்தச் செயலாளரை அழைத்து ஏன் தாமதமாக வருகிறீர்கள் என்று அவர் கேட்டபோது, தனது கார் பழுதாகிவிட்டதால் காலையில் கிளம்புவதில் சிரமம் ஏற்படுகிறது என்று பதிலளித்திருக்கிறார்.

மற்ற எந்தப் முதலாளியும் திட்டிவிட்டு அல்லது வேறுவிதமாக அட்வைஸ் செய்திருப்பார்கள். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் செய்தது முற்றிலும் எதிர்பாராதது. அன்று பிற்பகலிலேயே, அவர் அந்தச் செயலாளரின் அலுவலகத்திற்குள் நுழைந்து, ஒரு புதிய ஜாகுவார் காரின் சாவிகளை அவரிடம் கொடுத்து, "இனிமேல் தாமதமாக வரக்கூடாது!" என்று கூறியிருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில், ஜாகுவார் ஒரு ஆடம்பரமான கார். இந்த காரின் விலை சுமார் $35,000 இருக்கும். இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிட்டால், தற்போது அந்தக் கார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ChatGPTயின் 'Deep Research' உபயோகிப்பதற்கு முன் இத படியுங்க..!
Steve Jobs

இச்சம்பவம், ஸ்டீவ் ஜாப்ஸின் ஆளுமையின் ஒரு வித்தியாசமான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர் ஒருபுறம் கடுமையாகவும், தனது தரத்தில் சிறிதும் சமரசம் செய்யாமலும் இருந்தார். மறுபுறம், ஒரு ஊழியரின் பிரச்சனையைக் கண்டறிந்து, அதற்கு ஒரு தீர்வை வழங்கி, தனது பணியாளர் சரியாக செயல்படுவதை உறுதி செய்தார். இது அவரது "ஊக்கப்படுத்தும் அணுகுமுறை" மற்றும் "பிரச்சனை தீர்க்கும்" திறனை காட்டுகிறது. இந்தச் சம்பவம் இன்றும் ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில் முறையின் அணுகுமுறையை நினைவூட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com