புதிய வரலாற்று சாதனை! - முதல் முறையாக ஆண்களை முந்திய பெண் வாக்காளர்கள்!

vote
vote
Updated on

2026ம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு 92.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 92.88% வாக்குகள் பதிவாகி மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கூச்பெஹார் மாவட்டத்தில் 96.04% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த உச்சகட்ட வாக்குப்பதிவு மேற்குவங்க தேர்தல் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், புருலியா, மேற்கு மிட்னாப்பூர் மற்றும் பாங்குரா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை மற்றும் அரசியல் மோதல்களுக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரை நடைபெற்றாலும், நீண்ட வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆண் வாக்காளர்களின் வாக்குப்பதிவை விட பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது ஒரு வரலாற்று முதல் நிகழ்வாகும்.பெண்கள் 92.7% பேர் வாக்களித்த நிலையில், ஆண்களின் எண்ணிக்கை 90.9% ஆக இருந்தது.

2011 தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு 84.4% ஆக இருந்த முந்தைய சாதனையை விட இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

தமிழ்நாட்டிலும் 85.1% என்ற சாதனை அளவிலான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது; 83.6% ஆண்கள் வாக்களித்த நிலையில், 85.7% பெண்கள் வாக்களித்துள்ளனர்.2011 தேர்தலில் பெண்களின் வாக்குப்பதிவு 78.5% ஆக இருந்த நிலையில், இது மாநிலத்தின் முந்தைய சாதனைகளை விட ஒரு முன்னேற்றமாகும்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் விரைவில் 2வது ஏசி புறநகர் ரயில்..! எந்த ரூட் தெரியுமா.?
vote

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com