முதல்வர் விஜய் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - நயினார் நாகேந்திரன்.!

nainar nagendran
nainar nagendransource:dailythanthi
Updated on

ஆவின் நிறு​வனத்​தின் தினசரி பால் கொள்​முதல் தற்​போது 26 லட்​சம் லிட்​ட​ராக சரிந்​துள்​ளதாகவும், இதனால் பச்சை நிற பால் பாக்​கெட் உட்பட பல்​வேறு பால் விநி​யோகம் குறைக்​கப்​பட்​டுள்​ளது எனவும் தகவல் வெளியானது.

மேலும் இது குறித்து தமிழக பால் முகவர்​கள் சங்​கத் தலை​வர் பொன்​னு​சாமி கூறிய​தாவது: ஆவின் பால் தினசரி கொள்​முதல் தற்​போது 26 லட்​ச​மாக இறங்​கி​விட்​டது. இதற்கு முக்​கிய காரணம் கொள்​முதல் விலை உயர்த்​தாதது ஆகும்.ஆவினின் நஷ்டத்தை சரி செய்ய கொள்​முதல் விலை, விற்​பனை விலையை உயர்த்​தி​னால் பாலை தட்​டுப்​பாடு இல்​லாமல் கொடுக்க முடி​யும். எனவே, கொள்​முதல் விலையை ரூ.6-ம், விற்​பனை விலையை ரூ.10-ம் உயர்த்த வேண்​டும். பால் முகவர்​களுக்கு கமிஷன் தொகையை ரூ.2 உயர்த்தி கொடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதுகுறித்​து, ஆவின் நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு : சென்னை முழு​வதும் அனைத்து வகை​யான பால் வகைகளை​யும் ஆவின் நிறு​வனம் எவ்​வித தடை​யுமின்றி தொடர்ந்து விநி​யோகிக்​கிறது.எந்​தவொரு பால் வகை​யின் விநி​யோகத்​தி​லும் குறைப்பு ஏது​மில்​லை. வழக்​க​மான தேவை மற்​றும்​ நுகர்​வோரின் தற்​போதைய தேவைக்​கேற்ப பால் விநி​யோகம் தொடர்ந்​து மேற்​கொள்​ளப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

விஜய் நயினார் நாகேந்திரன்
விஜய் நயினார் நாகேந்திரன் Source:indianexpresstamil

இந்நிலையில் இது குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த சில தினங்களில் மட்டும், கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ. 2 தள்ளுபடி ரத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வரை குறைவு, சில ஆவின் நிலையங்களில் ஒருவருக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற கெடுபிடி, மே மாதத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 60 சதவிகிதம் பால் தர விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட அடிப்படை தேவைக்கு பெருமளவில் நம்பியிருக்கும். ஆவின் நிறுவனத்தில் இதுபோன்ற குளறுபடிகள் தொடருமானால், மக்கள் இரட்டிப்பு விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களேயே நாட வேண்டியிருக்கும். இது தமிழக மக்களை நிதிச்சுமைக்குள் தள்ளுவதோடு. அவர்களின் ஊட்டச்சத்தையும் பலிகடாவாக்கும்.

ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு முந்தைய திமுக அரசு போதிய ஊக்க தொகையை வழங்காததால், பால் கொள்முதல் வீழ்ச்சியடைந்து, அதிக உற்பத்தி செலவு ஏற்பட்டுள்ள நிலையில், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆவின் பாலின் தரத்திலும், விநியோகத்திலும், பொதுமக்களுக்கு கிடைக்கும் சலுகைகளிலும் சமரசம் செய்து, நஷ்டத்தை ஈடுசெய்ய முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

இனியும் மக்களின் ஊட்டச்சத்தில் கைவைக்கும் திட்டம் ஏதும் இருந்தால். அதை கைவிட்டு, ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாக பட்டியலிட்டு முதல்வர் ஜோசப் விஜய் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மேலும், அமுல் போன்ற பிற மாநில பால் கூட்டுறவு நிறுவனங்களை போல ஆவினும் செழிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
சிகிச்சைக்கு கூட பணமில்லை...கால் விரல்களை இழந்து தவிக்கும் பாவா லட்சுமணன்..!!
nainar nagendran
logo
Kalki Online
kalkionline.com