வாக்குத் தவறிய வாஜ்பாய், அத்வானி பரபரப்பு புத்தகம் சொல்லும் உண்மைகள்!

வாக்குத் தவறிய வாஜ்பாய், அத்வானி பரபரப்பு புத்தகம் சொல்லும் உண்மைகள்!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

“இந்தியாவின் முக்கிய புள்ளி: 7 ரேஸ் கோர்ஸ் ரோடு பார்வையில் இருந்து“ இந்தத் தலைப்பில் அண்மையில் ஒரு புத்தகம் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பூட்டி இருக்கிறது.

யார் எழுதிய புத்தகம் இது? அப்படி என்ன இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? என்கிறீர்களா? எஸ். நரேந்திரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

7 ரேஸ் கோர்ஸ் ரோடு என்பது இந்தியப் பிரதமர் வசிக்கும் பங்களாவின் முகவரி ஆயிற்றே? நரேந்திரா என்ற அதிகாரிக்கும், பிரதமர் பங்களாவுக்கும் என்ன சமந்தம்?

பி.வி. நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமராக இருந்த சமயம், அவருடைய தகவல் ஆலோசகராக இருந்தவர்தான் நரேந்திரா. அவர், நரசிம்ம ராவுடனான தனது அனுபவங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். அதை பல சுவாரசியமான, சர்ச்சக்குரிய, பரபரப்பான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுதான் பரபரப்பான ஹர்ஷத் மேத்தா தொடர்பான பங்குப் பத்திர ஊழல் வெளியாகி நாட்டையே உலுக்கியது. “தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களை ஹர்ஷத் மேத்தாவுடன் தொடர்புப் படுத்தி ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது, அவர்கள் மீது உடனடியாக நடவைக்கைகள் எடுக்க மிகவும் தயங்கினார் ராவ் என்று குறிப்பிடுகிறார் நரேந்திரா.

நரசிம்ம ராவின் ஓராண்டு ஆட்சியின் நிரைவினை ஒட்டி, அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சந்திப்புக்கு முன்பாக, ராவை உட்கார வைத்து, அவரது சக அமைச்சர்கள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் இருவரும் உடனிருக்க, ஒரு பத்திரிகையாளர் போல தான் பல்வேறு தர்ம சங்கடமான கேள்விகளையும் நரசிம்ம ராவிடம் கேட்டு, அவரை பத்திரிகையாளர் சந்திப்புக்குத் தயார் செய்ததை இந்தப் புத்தகஹ்ட்தில் விவரித்திருக்கிறார் நரேந்திரா.

பாபர் மசூதி தகர்ப்பு பற்றிக் குறிப்பிடுகையில், நரேந்திரா “வாஜ்பாய், அத்வானி இருவரும் “பாபர் மசூதி தகர்க்கப்படாது” என்று ராவிடம் வாக்குறுதி அளித்தபோதிலும், அதனைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகக் கூறி

வருத்தப்பட்டார் நரசிம்ம ராவ்” என்று எழுதி உள்ளார். மேலும், பா.ஜ.கவுடன் சேர்ந்து பாபர் மசூதித் தகர்ப்புக்கு ராவ் உடந்தையாக இருந்தார் என்ற ஒரு சிலரது குற்றச்சாட்டினையும் நரேந்திரா இந்தப் புத்தகத்தில் வன்மையாக மறுத்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com