விமானப் பாதுகாப்பில் அலட்சியம்! ஏர் இந்தியா தலைமைக்கு DGCA கடும் எச்சரிக்கை - நடந்தது என்ன?

An image showing an airplane flying in the sky on the left, and two pilots inside a cockpit
DGCA imposes strict time-limit regulations on pilots to ensure aviation safety.
Published on

சிறப்புச் செய்தி: விமானப் பயணிகளின் பாதுகாப்பிற்கு முதன்மையான இடத்தை அளிக்க வேண்டிய விமான நிறுவனங்கள் சில நேரங்களில் அலட்சியமாக செயல்படுவது கவலை அளிக்கிறது. தற்போது, இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா, விமான ஓட்டிகளின் பணி நேர விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பைலட்களின் எண்ணிக்கையைக் குறைத்த ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கையை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடுமையாகச் சாடியுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால், மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

விமானிகளின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, DGCA ஒரு தற்காலிக சிறப்பு அனுமதியை ஏர் இந்தியாவுக்கு வழங்கியது.

இதன்படி, பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் விமானிகளின் பணி நேரத்தை நீட்டிக்கலாம்.

ஆனால், ஏர் இந்தியா இந்தச் சலுகையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தாமல் வேறு வழித்தடத்தில் செல்லும் பெங்களூரு-லண்டன் போன்ற விமானங்களுக்கும் இந்தச் சிறப்பு அனுமதியைப் பயன்படுத்தியது.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, மூன்று விமானிகளுக்குப் பதிலாக இரண்டு விமானிகளை மட்டுமே பணியமர்த்தியது.

நீண்ட தூர விமானப் பயணங்களில் பைலட்கள் சோர்வடைய வாய்ப்புகள் அதிகம். இதனால் விமானத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம்.

இதைத் தவிர்க்கவே சர்வதேச அளவில் மூன்று பைலட்களைப் பணியமர்த்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு பைலட் ஓய்வெடுக்கும்போது மற்ற இருவர் விமானத்தை இயக்குவது பாதுகாப்பாக இருக்கும்.

ஏர் இந்தியா ஏன் இப்படிச் செய்தது?

  • இது ஒரு பொருளாதார நோக்கமா? அல்லது நிர்வாகப் பிழையா? ஏர் இந்தியா தான் இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.

DGCA-வின் அதிரடி நடவடிக்கை:

இந்த விதிமீறல் குறித்து அறிந்த DGCA உடனடியாக விசாரணையைத் தொடங்கியது.

அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. DGCA, ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால், ஏர் இந்தியாவின் பதிலில் DGCA திருப்தியடையவில்லை. ஏர் இந்தியா செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், தெளிவான விளக்கத்தையும் அளிக்கத் தவறியது.

இதையடுத்து, DGCA நேரடியாக ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சனுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

விமானப் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராத வண்ணம் பார்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டது.

ஏர் இந்தியாவின் விளக்கம்:

விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஏர் இந்தியா, வான்வெளி மூடல் காரணமாக வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை புரிந்துகொண்டதில் ஏற்பட்ட குழப்பமே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று கூறியது.

மேலும், DGCA-விடமிருந்து தெளிவு கிடைத்தவுடன் உடனடியாக பணி அட்டவணையை சரிசெய்ததாகவும், தற்போது அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும், DGCA-வின் இந்த அதிரடி நடவடிக்கை, விமானப் பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது என்ற உறுதியான செய்தியை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உணர்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இந்தியா-சீன உறவில் திருப்பம்: சுற்றுலா விசா சேவை மீண்டும் தொடக்கம்!
An image showing an airplane flying in the sky on the left, and two pilots inside a cockpit

எதற்காகவும் பாதுகாப்பு விதிகளை மீறுவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com