#BREAKING : விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்- முதலமைச்சர் விஜய்..!

திமுக ஆட்சியில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Updated on

தமிழக சட்டசபை கடந்த மாதம் 5-ம்தேதி பட்ஜெட்டி உரையுடன் தொடங்கியது. தினமும் நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று புதன்கிழமை பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

கருத்துரிமை, போராட்ட உரிமையை தவெக அரசு உறுதி செய்கிறது. கால தாதமம், ஆவணங்கள் மாயம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

2021 மே -2026 ஏப்ரல் வரை ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

மனிதநேயமற்ற வகையில் விவசாயிகள் மீது திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக முதலமைச்சர் விஜய் கூறினார்.

மேலும் கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்.

பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.

முதலமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் குரல் எழுப்பிய நிலையில் அமளியில் ஈடுபடும் திமுக எல்எல்ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

logo
Kalki Online
kalkionline.com