

உலகிலேயே மிக அதிக அளவில் காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் முதன்மையான இடத்தை, தலைநகர் டெல்லி பெற்றுள்ளது. பல நேரங்களில் டெல்லியின் காற்றுத்தரம் 400 AQI என்ற மிக மோசமான கட்டத்தில் இருந்துள்ளது. வருங்காலத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் காரணமாக 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், டெல்லியில் புதிய இருசக்கர வாகனங்களுக்கு பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாத ஈ பைக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது.
டெல்லியில் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு மிக அதிக அளவில் இருப்பதால், உள்ளூர்வாசிகள் கடுமையான மூச்சு திணறல் , நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இது மட்டுமல்லாமல் ஏராளமான ஆரோக்கிய சீர்கேடுகளையும் காற்று மாசுபாடு ஏற்படுத்துகிறது. இதனால், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மாநில அரசு தீவிரமாக நடவடிக்கைக்கை மேற்கொண்டு வருகிறது.