பெண்களின் முன்னேற்றத்தை பாழாக்கியதை கொண்டாடுகிறீர்களா ? ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி

Edappaadi asking Question to Stalin
Edappadi Palanichami rise Question Twitter
Updated on

நேற்று பாராளுமன்றத்தில் மகளிர் ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்துள்ளது பற்றி , அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தனது X தளத்தில் கடுமையாக சாடியிருந்தார்.

தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்த , தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய 20 பாராளுமன்ற தொகுதிகளை இழந்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே! இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை அறியாமல், கண்மூடித்தனமான உங்களின் எதிர்ப்பினால், "மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கிய , தமிழகம் கூடுதல் தொகுதிகளைப் பெறும் பொன்னான வாய்ப்பினை இழந்தோம்.

​​ஒருவேளை தொகுதி வரையறை , 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செயல்படுத்தப்பட்டால் , நாம் 9 பாராளுமன்ற தொகுதிகளை இழந்திருப்போம். ஆனால், உங்களின் அறிவேற்ற எதிர்ப்பின் காரணமாக, தொகுதி மறு வரையறை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதனால் நாம் கூடுதலான பாராளுமன்ற தொகுதிகளை இழப்போம்.

இதற்கு முன்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் , செல்வி. ஜெயலலிதா 1998 ஆம் ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போதும் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ள , உங்களது கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து அது நிறைவேற விடாமல் தடுத்தன. இந்த முறையும் நீங்கள் அந்த மசோதாவை எதிர்த்து அதைக் கொன்று விட்டீர்கள். இதனால் நீங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெண்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை செய்து உள்ளீர்கள்.

​திரு. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் செய்த பாதிப்பிற்காக வா? அல்லது பெண்களின் முன்னேற்றத்தை பாழாக்கியதற்கா? என்று அவரது பதிவு இருந்தது.

https://x.com/i/status/2045421998365663273

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com