தினமும் 16 முறை சூரிய உதயம் பார்க்கிறாரா விண்வெளி நாயகன் சுபான்ஷு!

shubhanshu shukla
shubhanshu shukla
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியுடனும், மாணவர்களுடனும் காணொளி மூலம் உரையாடினார். அப்போது விண்வெளியில் தான் தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பதாகக் கூறி மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தினார்.

சுக்லா, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய குடிமகன் ஆவார். அவர் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார். அங்கே உள்ள சக விண்வெளி வீரர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

விண்வெளியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட சுபான்ஷு, "இங்கு எடை இல்லாத நிலையில் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. விண்வெளியில் நடப்பதும், சாப்பிடுவதும் ஒரு குழந்தையைப் போல புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வருகிறேன்" என்று கூறினார்.

மாணவர்களிடம் உரையாடியபோது, "நாங்கள் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறோம். இதன் காரணமாக ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்க்கிறோம். பூமிக்கு மேலே இருந்து பார்க்கும்போது, எந்தவித எல்லைகளும் இல்லாமல் பூமி ஒரே கோளமாகத் தெரிகிறது. இந்தியா வரைபடத்தில் இருப்பதை விட மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது" என்று பெருமையுடன் கூறினார்.

இதையும் படியுங்கள்:
தானம் செய்வது குறித்து தர்மருக்கு உபதேசித்த பீமன்!
shubhanshu shukla

விண்வெளி நிலையத்தில் நேரத்தை நிர்வகிப்பது குறித்த கேள்விக்கு, பூமியின் கிரீன்விச் தீர்க்கரேகை (Greenwich Mean Time - GMT) அடிப்படையிலேயே தங்களது பயணத் திட்டம் அமைவதாகவும், இங்கு புவியீர்ப்பு விசை இல்லாததால் தசைகளும் எலும்புகளும் பலவீனமாகாமல் இருக்க சிறப்புப் பயிற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். விண்வெளியில் தூங்குவது ஒரு பெரிய சவால் என்றும், இதற்குப் பழக்கப்பட சிறிது காலம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுபான்ஷு சுக்லாவின் இந்த உரையாடல், விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்டியதுடன், இந்திய விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com