ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி! சென்னையில் முதல்முறையாக!

ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி! சென்னையில் முதல்முறையாக!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

வரும் ஏப்ரல் 26 முதல் 28 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையதில் ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை நடக்கிறது.

ஐஈடி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பிரபலமான ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சிகளை ஆண்டுதோறும் பெரும்பாலும் மும்பையில் நடத்தி வருகிறது. இவ்வாண்டு முதல் முறையாக, மும்பைக்கு வெளியில் சென்னையில் இந்தக் கண்காட்சி நடக்கிறது.

நம் தமிழ்நாடு, இந்தியாவின் டெட்ராய்ட் என்ற பெருமைக்கு உரியது. குறிப்பாக சென்னை இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் மையமாக உள்ளது.

பிராசஸ் ஆட்டோமேஷன் துறையில் தமிழ்நாடு வலுவான தொழில்துறை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மற்றும் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சர்வதேச இஞ்சினியரிங் மற்றும் சிவில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர்களைக் கொண்ட நகரமாகவும் சென்னை விளங்குகிறது.

மேலும், மொபைல் போன் அசெம்பிளி யூனிட்டுகள், பொறியியல் நிறுவனங்கள் மற்றும் பல உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தடம் பதித்துள்ளன. தமிழ்நாடு குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை இந்தியாவில் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க மையங்களாக மாறியுள்ளன, மேலும் அவை இந்தத் தொழில்களில் பல ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை கடைபிடிக்கின்றன.

தொழிற்சாலை ஆட்டோமேஷன் என்பது தானியங்கி தொழில்நுட்பங்கள், மூலமாக உற்பத்தித்திறனை மேம்படுத்தி, தயாரிப்புகளின் தரத்தை அதிகரிப்பதுடன் உற்பத்தி செலவையும் குறைக்கிறது.

ஐஈடி கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். எம். ஆரோக்கியசாமி கூறுகையில், "ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி, நவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் சிலவற்றை அறிந்துகொள்ளவும் இந்தத் துறையில் உள்ள வல்லுநர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும், சக தொழில்துறையைச் சேர்ந்தவர்களோடு நெட்வொர்க் செய்யவும் வாய்ப்புகளை வழங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

ஆட்டோமேஷன் எக்ஸ்போசவுத் 2023யின் அங்கமாக முதல் நாள் “தலைமைச் செயல் அதிகாரிகளின் மாநாடு”ம், அடுத்த நாள் இரண்டு தொழில்நுட்ப மாநாடுகளும் நடைபெற உள்ளன. இதில் ஆடோமேஷன் தொடர்பான பல்வேறு தலைப்புகள் குறித்து சர்வதேச வல்லுனர்கள் பங்கேற்றுப் பேசுவார்கள்.

நீங்கள் உங்கள் தொழில்துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணராக இருந்தாலும் அல்லது ஆட்டோமேஷன் துறையில் புதியவராக இருந்தாலும், இஞ்சினியரிங்க் கல்லூரி மாணவராக இருந்தாலும் சரி, ஆட்டோமேஷன் எக்ஸ்போசவுத் 2023 இல் நடைபெறும் மாநாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி 153 ஸ்டால்கள் கொண்டது. இதில் 200+ நிறுவனங்கள் பங்கேற்கின்றன, 10,000+ தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியில் ஸ்டார்ட்-அப்கள், மேக் இன் இந்தியா மற்றும் மேட் இன் இந்தியா நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.

மாநாடுகளின் விவரங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் இணையதளத்தில் கிடைக்கும்: www.automationindiaexpo.com

logo
Kalki Online
kalkionline.com