பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

akshay anand bahujan samaj party
akshay anand bahujan samaj party
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ல்லா கட்சிகளும் வாரிசு அரசியல் செய்துகொண்டிருக்கும் போது, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரது அரசியல் வாரிசு யார் தெரியுமா? அக் ஷய் ஆனந்த். இவர் மாயாவதியின் உறவினர். இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களுக்காக ஒரு பக்கம் மாயாவதியும், இன்னொரு பக்கம் அக் ஷய் ஆனந்தும் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சமீப காலமாக மாயாவதி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். ஆனால் இதற்கு எதிர்மாறாக, பத்திரிகையாளர்களோடு மிகவும் நட்பு பாராட்டுகிறார் அ க் ஷய் ஆனந்த். மீடியா பேட்டிகளின்போது, அடிக்கடி டாக்டர் அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

இவரது வளர்ச்சி, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கன்ஷிராம் மறைவுக்குப் பின், கட்சி மாயாவதியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்தது முதல் அவருடைய நிழலாக இருந்து வந்த சதிஷ் மிஸ்ரா சமீப காலமாக கட்சி விவகாரங்களில் ஈடுபடுவதில்லை.

தனது பிரச்சார மேடைகளில் இவர், பாஜகவையும் விமர்சிக்கிறார். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளையும் விமர்சிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் இந்தியர்கள் கைது!
akshay anand bahujan samaj party

“இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் சுமார் 60 ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இருந்தபோதிலும், அது ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு இதுவரை ஒன்றும் செய்யாமல், இப்போதும் இட ஒதுக்கீடு, வறுமை ஒழிப்பு என்று வாய் கூசாமல் வாக்குறுதி கொடுத்துக்  கொண்டிருக்கிறது. சமாஜ்வாதி கட்சி ஆட்சியின்போது மாநில முன்னேற்றத்துக்கு அது முக்கியத்துவம் கொடுக்கவில்லை; சட்டம் ஒழுங்கு குறித்து கவலையேபடவில்லை; குண்டாஸ் ராஜ் நடத்தியது. அப்படிப்பட்டவர்களைக் கொண்ட இந்தியா கூட்டணியில், நாங்கள் எப்படி இடம்பெற முடியும்?” என்று கேட்கிறார்.

“பிஎஸ்பி கட்சியை பாஜகவின் பி டீம் என்று சொல்கிறார்களே?” என்று அவரிடம் கேட்டபோது, “உ.பி.யில் பாஜவுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் பி.எஸ்.பிக்குத்தான் வரும். அப்படி இருக்கும்போது, எங்களை பாஜகவின் பி டீம் என்று சொல்வது ரொம்பத் தவறு” என்று பதில் அளிக்கிறார்.

இவர் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம், இந்தத் தேர்தலில் இவர் போட்டியிடப் போவதில்லையாம்! அது மட்டுமில்லை; எதிர்காலத்திலும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இவருக்கு இல்லையாம்!

logo
Kalki Online
kalkionline.com