தி.மு.க நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள் கட்அவுட்கள் வைக்கக்கூடாது! திமுக தலைமை எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க தலைமை தனது நிர்வாகிகளுக்கு மற்றும் கட்சிகாரர்களுக்கு “கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை எச்சரித்துள்ளது.

பொதுக்கூட்டங்களில் பேனர் வைப்பதால் பல்வேறு பிரச்சனைகள் எழுவதற்காக பல புகார்கள் திமுக அலுவகத்துக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால் இப்படி ஒரு முடிவை திமுக தலைமை அறிவித்துள்ளது என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒரு சிலர், முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொது மக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று மட்டுமே பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com