

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை நோக்கியே பயணித்து வருகிறது. இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் நடப்பாண்டில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைக் கடந்தது.
தங்கத்தின் இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மததியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது.
நேற்று ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து, ரூ.1,12,800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 அதிகரித்து ரூ.270-க்கு விற்பனையாகிறது.