
அல்ஜீரிய தலைநகரில் வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது என்பது தெரியவந்துள்ளது.