முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 2ஆம் கட்ட பிரச்சாரம் எந்தெந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி ஏப்ரல் 4 காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் பொதுக்கூட்டம், மாலை 5 மணிக்கு சங்கரன் கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு நெல்லை பாளையங்கோட்டையில் தன்னுடைய பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.