பிரதமரின் வாய்மொழி உத்தரவை நம்பவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது - ஸ்டாலின் பதிவு..!

Delimitation
CM Stalin
Updated on

நேற்று மக்களவையில்  எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட தொகுதி வரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று மாலை வரை தொடரும் என மக்களவை சபாநாயகர் அறிவித்த நிலையில் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் தனது எதிர்ப்புகளை ஆதாரத்துடன் முன்மொழிந்து வருகிறார்.

தொகுதி மறுவரையறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தை மத்திய பாஜக அரசு மொத்தமாக திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமர் மற்றும் உளவுத்துறை அமைச்சர் வாய்மொழி உத்திரவாதம் அளித்துள்ளனர்  

பிரதமரின் வாய்மொழி உத்தரவை நம்பவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது என திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் என்றும் தொகுதி மறு வரையறை க்கு எதிரான நம் போராட்டங்களில் முடிவினை அறியப்போகும் நாள் என்று அவசரமாக இதை நிறைவேற்றக்கூடாது என்றும் அப்படி எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றினால் பாஜக இதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள  x தளப் பதிவிலிருந்து

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.

நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்
ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள்இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது.

அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.

#WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!

இதையும் படியுங்கள்:
#JUST IN: மகுடம் சூடிய தெற்கு இரயில்வே: நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை.!
Delimitation

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com